பாஜக தேர்தல் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்கூற அனைவருக்கும் இலவச போட்டோஷாப் பயிற்சி அளிக்கப்படும்; பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு உழைக்க போதிய நேரமில்லாததால் ஒரு நாளுக்கு 28 மணி நேரம் என்று கால அளவு மாற்றியமைக்கப்படும் என்று புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவுகின்றன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தேர்தல் பரப்புரைகள், தேர்தல் அறிக்கைகள், வாக்கு சேகரிப்பு என்று கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
ஒருபக்கம் தேர்தல் அறிக்கைகளைக் கூட்டணிக் கட்சிகள் சுறுசுறுப்பாக வெளியிட்டு வருகின்ற நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை என்று சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
`இதெல்லாம் தவறுங்க’ என்னும் பேஸ்புக் பக்கத்தில் பிஜேபியின் தேர்தல் அறிக்கை என்று இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. அதில், “நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்கூற அனைவருக்கும் இலவச போட்டோஷாப் பயிற்சி அளிக்கப்படும்; பிரதமர் அவர்களுக்கு நாட்டு மக்களுக்கு உழைக்க போதிய நேரமில்லாததால் ஒரு நாளுக்கு 28 மணி நேரம் என்று கால அளவு மாற்றியமைக்கப்படும்” என்கிற வாசகங்கள் பாஜகவின் லோகோவுடன் இடம் பெற்றுள்ளன.


Archived Link 1:https://archive.ph/uTd4G
Archived Link 2:https://archive.ph/XlOrL
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
பாஜக தேர்தல் அறிக்கையில் போட்டோஷாப் இலவசமாக சொல்லித் தரப்படும் என்று கூறியதாகப் பரவும் புகைப்படம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வின் முடிவில், குறிப்பிட்ட அந்தப் புகைப்படம், கடந்த 2019 ஆம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் வைரலானது நமக்குத் தெரிய வந்தது.
Archived Link: https://archive.ph/iOuOl
மேலும், குறிப்பிட்ட சில முன்னணி செய்தித்தளங்களும் இவை நெட்டிசன்களால் கேலியாக எடிட் செய்து உருவாக்கப்பட்ட மீம் புகைப்படங்கள் என்பதையும் அன்றே தெளிவாக தெரிவித்துள்ளன. அவற்றின் இணைப்புகளையும் இங்கே உங்களுக்காக இணைத்துள்ளோம்.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாஜக தனியாக தேர்தல் அறிக்கை என்று எதையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலவசமாக போட்டோஷாப் சொல்லித்தரப்படும் என்று கூறியதாகப் பரவும் புகைப்படம் போலியானது; 2019 ஆம் ஆண்டிலேயே வைரலாகியது என்பதை தெளிவாக விவரித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources:
Samayam tamil:https://tamil.samayam.com/?back=1
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)