Claim: மோடிக்கு ஆதரவு தருவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் மக்கள் போராட்டம்! போராட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்தை தீயில் எரித்ததால் பரபரப்பு
Fact: வைரலாகும் வீடியோ கடந்த மார்ச் 2024ல் எடுக்கப்பட்டதாகும்.
சந்திரபாபு நாயுடு மோடிக்கு ஆதரவளித்ததால் அவருக்கு எதிராக ஆந்திர மக்கள் போராட்டம் நடத்துவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“மோடிக்கு ஆதரவு தருவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் மக்கள் போராட்டம்! போராட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்தை தீயில் எரித்ததால் பரபரப்பு” என்று இந்த வீடியோ வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கினாரா?
Fact Check/Verification
சந்திரபாபு நாயுடு மோடிக்கு ஆதரவளித்ததால் அவருக்கு எதிராக ஆந்திர மக்கள் போராட்டம் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை நாம் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வு என்பது நமக்குத் தெரிய வந்தது.
“Big Shock To Chandrababu In Anantapur And Guntakal” என்று Shakshi Tv வெளியிட்டிருந்த செய்தி வீடியோவில் தற்போது வைரலாகும் இக்காட்சி இடம்பெற்றுள்ளது. அனந்தபூரில் டகுபதி வெங்கடேஸ்வர பிரசாத் TDP வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபாகர் செளத்ரி ஆதரவாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகளில் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்நிகழ்வின் வீடியோவே தற்போது மோடிக்கு ஆதரவு அறிவித்தததால் அவருக்கு எதிராக ஆந்திர மக்கள் போராட்டம் என்று பரவி வருகிறது.
Conclusion
சந்திரபாபு நாயுடு மோடிக்கு ஆதரவளித்ததால் அவருக்கு எதிராக ஆந்திர மக்கள் போராட்டம் என்று பரவும் வீடியோ கடந்த மார்ச் மாதத்தை சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Youtube Video from, Shakshi TV, Dated March 29, 2024
Report from andhrajyothy, Dated March 31, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)