Tuesday, April 22, 2025
தமிழ்

Fact Check

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்ய வேண்டும் என்றாரா?

banner_image

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்யக் கோரி பதாகை ஒன்றை ஏந்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறித்து பரவும் படம்
Source: Facebook

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.  சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இவருக்கு  சொந்தமான இடங்கள் மற்றும் இவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையிட்டு  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி இவர்மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

இச்சம்பவமானது அரசியல் வட்டாரங்களில்  மிகப்பெரிய பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பதாகை ஒன்றை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

அப்பதாகையில், “நான் திருடி சம்பாதித்து சொத்து சேர்த்த வழக்கை விரைவில் விசாரித்து என்னை கைது செய்ய வேண்டும்”  என்கிற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறித்து பரவும் படம் - 1

Facebook Link | Archive Link

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறித்து பரவும் படம் - 2

Facebook Link | Archive Link

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறித்து பரவும் படம் - 3

Facebook Link | Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் மற்ற வீராங்கனைகளின் புகைப்படங்கள்!

Fact Check/Verification

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்யக் கோரி பதாகை ஒன்றை ஏந்தியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து அறிய வைரலாகும் அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் அப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.

திமுக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை என்று அதிமுக சார்பில் கடந்த புதனன்று (28/07/2021) தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

கரூர் பகுதியில் இந்தப் போராட்டமானது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக தொண்டர்கள் கையில் பதாகையை ஏந்தி ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதுக்குறித்த செய்தி சமயம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. கூடவே விஜயபாஸ்கர் அவர்கள் கையில் பதாகையுடன் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது.  அப்பதாகையில், “ நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த திமுக அரசை கண்டிக்கிறோம்.” என்று எழுதப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறித்து பரவும் படத்தின் உண்மைத்தன்மை
Source: Samayam Tamil

மேற்கண்ட செய்தியில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படமே எடிட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஒப்பீடு படம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும் இப்போராட்டம் குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Archive Link

Also Read: தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

Conclusion

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை கைது செய்யக் கோரி பதாகை ஒன்றை ஏந்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Samayam Tamil: https://tamil.samayam.com/latest-news/karur/aiadmk-protests-in-karur-district-led-by-former-minister-m-r-vijayabhaskar/articleshow/84816382.cms

MR Vijaya Basakar Twitter Handle: https://twitter.com/OfficeofminMRV/status/1420303020357677057


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.