Claim: மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62ஆக கூட்டப்பட்டது.
Fact: வைரலாகும் செய்தி தவறானதாகும். அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 2 வருடங்கள் கூட்டப்பட்டது. ..(62 வயது)” என்று இந்த தகவல் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 2026 தேர்தல் தொடர்பாக உதயநிதி-அண்ணாமலை ரகசிய சந்திப்பு; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்படுவதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகிய அட்டவணைப்படி உண்மையில் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தோம். அதன்படி, கடந்த 5வது ஊதியக்குழு பரிந்துரையில் ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதினை 58இல் இருந்து 60ஆக உயர்த்த வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய 7வது ஊதியக்குழு அறிக்கையில் அவ்வாறு எந்த அறிவிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை.
தொடர்ந்து, வைரலாகும் செய்தி போலியானது என்று PIB தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் தெளிவாக விளக்கமளித்துள்ளது. எனவே, இச்செய்தி போலியான ஒன்றாகும்.
Also Read: குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாகப் பரவும் AI புகைப்படம்!
Conclusion
ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்படுவதாகப் பரவும் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Post From, PIBFactCheck, Dated November 19, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)