Tuesday, April 22, 2025
தமிழ்

Fact Check

2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் ஸ்டாலின்; வைரலாகும் டிவீட் உண்மையானதா?

banner_image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் என்று ஊடகவியலாளர் தமிழ்கேள்வி செந்தில்வேல் டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் ஸ்டாலின் என்று செந்தில்வேல் ட்வீட்

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் தி.செந்தில் வேல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த ஸ்க்ரீன்ஷாட்டில்,

2024 ஆகஸ்ட் 15 சுதந்திரதின நாளில் செங்கோட்டையில் கொடியேற்று வார், வருங்கால இந்திய ஒன்றிய பிரதமர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..

Mark my Tweet.

என்று செந்தில்வேல் பதிவிட்டுள்ளதாக உள்ளது.

இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் ஸ்டாலின் என்று செந்தில்வேல் ட்வீட் - 1

Facebook Link

2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் ஸ்டாலின் என்று செந்தில்வேல் ட்வீட் - 2

Facebook Link

2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் ஸ்டாலின் என்று செந்தில்வேல் ட்வீட் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம்; வைரலாகும் படம் உண்மையானதா?

Fact Check/Verification

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் என்று ஊடகவியலாளர் தமிழ்கேள்வி செந்தில்வேல் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.

இவ்வாறு தேடியதில் செந்தில்வேல் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.

உண்மையில் செந்தில்வேல் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், செந்தில்வேல் அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

செந்தில்வேல் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Senthilvel79 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @Senthillvel79 (இதில் ஒரு ‘l’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியிலேயே அது Sarcasm (போலிக் கணக்கு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசகர்களின் புரிதலுக்காக செந்தில் வேல் அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஒப்பீடு

ஏற்கனவே மேற்கண்ட போலிக்கணக்கிலிருந்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கட்டளையிட்டார்’ என்று ஒரு டிவீட் செய்யப்பட்டிருந்தது. அதை பலரும் செந்தில்வேல் அவர்கள்தான் பதிவிட்டார் என்று நம்பி பகிர்ந்த நிலையில் அதுக்குறித்து ஆய்வு செய்து அக்கருத்து செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலிக்கணக்கிலிருந்து பதிவிடப்பட்டிருந்தது என்பதை விளக்கி இருந்தோம்.

அந்த கட்டுரையை இங்கே படிக்கலாம்.

Conclusion

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 2024 சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் பிரதமராக தேசிய கொடியேற்றுவார் என்று ஊடகவியலாளர் தமிழ்கேள்வி செந்தில்வேல் டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.

இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Imposter

Our Sources

Twitter Advanced Search:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.