Wednesday, April 23, 2025
தமிழ்

Fact Check

மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக பொய்யுரைத்தாரா ஸ்டாலின்?

banner_image

Claim: தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக பொய்யுரைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Fact: இத்தகவல் தவறானதாகும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளி இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று, அப்பயனாளிக்கு வழங்கப்பட்ட இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்ட நிகழ்வே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.

“’ஸ்டாலின் ஆய்வு நடத்தும் ‘சூட்டிங்..’அடேங்கப்பா ஆட்சி என்பது இதுதான்… அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டிய ஆய்வை தனியார் மண்பட கார் பர்க்கிங்கில் செட் போட்டு நோயாளி போல ஒரு கிழவியை படுக்கவைத்து ‘டயலாக் சொல்லிக்கொடுத்து’ சூட்டிங் நடத்துறானுக!” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக கூறி பொய்யுரைத்தாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

Post Link | Archive Link

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக கூறி பொய்யுரைத்தாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

Archive Link

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக கூறி பொய்யுரைத்தாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றாரா திருச்சி சிவா?

Fact Check/Verification

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக கூறி பொய்யுரைத்தாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்படம் குறித்து தேடினோம்.

அத்தேடலில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தாவின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று, அவருக்கு வழங்கப்பட்ட இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டதாக கூறி பதிவு ஒன்றானது முதலமைச்சரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் தினகரனில் இதுக்குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளியான சுந்தராம்பாள் என்பவரின் வீட்டிற்கும், இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தாவின் வீட்டிற்கும் முதலமைச்சர் நேரில் சென்று மருந்து பெட்டகத்தை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக கூறி பொய்யுரைத்தாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
தினகரனில் வந்த செய்தி

இதனையடுத்து தேடுகையில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் எக்ஸ் பக்கத்திலும் இதுக்குறித்த பதிவு வீடியோவுடன் வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் முதலமைச்சர் சுந்தராம்பாள் வீட்டிற்கும், வசந்தாவின் வீட்டிற்கும் நேரில் செல்வதை காண முடிந்தது.

தமிழ்நாடு அரசும் இச்சம்பவம் குறித்து டிசம்பர் 19 அன்று செய்தி வெளியீடு வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அந்த செய்தி வெளியீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சுந்தராம்பாள் மற்றும் வசந்தாவின் வீட்டிற்கு நேரில் சென்று மருந்து பெட்டகம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக கூறி பொய்யுரைத்தாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் படத்தில் காணப்படுவது தனியார் மண்டபம் அல்ல; மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தாவின் இல்லமாகும்.
  2. முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனை ஆய்வுக்கு செல்லவில்லை;  மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளை நேரில் சந்திக்க சென்றுள்ளார்.

Also Read: வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக கூறி பொய்யுரைத்தாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தாவின் இல்லத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று அவருக்கு வழங்கப்பட்ட இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்ட நிகழ்வே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from CMO Tamilnadu, Dated December 19, 2024
X post from TN DIPR, Dated December 19, 2024
Press Release from Tamilnadu Government, Dated December 19, 2024
Report from Dinakaran, Dated December 19, 2024


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.