Claim: ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளராக லயோலா மணி அறிவிப்பு
Fact: வைரலாகும் செய்தி தவறானதாகும். அப்படி எந்த அறிவிப்பும் தவெக தரப்பில் வெளியாகவில்லை.
தவெக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக லயோலா மணி என்பவர் அறிவிப்பு என்று செய்தி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளராக லயோலா மணி அறிவிப்பு” என்று இந்த செய்தி பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?
Fact Check/Verification
தவெக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக லயோலா மணி என்பவர் அறிவிப்பு என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி குறித்து ஆராய்ந்தபோது தவெக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் என்று செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ள லயோலா மணி என்பவரே “இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை. தயவு செய்து பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். பொய் வந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பொய் வதந்திகளை பரப்பும் செயலை நிறுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.” என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, பரவும் இந்த செய்தி தவறானது என்பது நமக்கு உறுதியாகிறது.
Conclusion
தவெக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக லயோலா மணி என்பவர் அறிவிப்பு என்று பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
X Post From, Loyola Mani, Dated January 08, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)