Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் அனுமதி மறுப்பு
வைரலாகும் நியூஸ்கார்ட் கடந்த 2024ஆம் ஆண்டு செய்தியாகும்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் அனுமதி மறுப்பு என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அண்ணாமலையின் எதிர்கால வாழ்க்கையை நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் பொன்.ரா..அட பாவமே..” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் அனுமதி மறுப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
பரவும் நியூஸ்கார்டினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலமாக தேடியபோது கடந்த மே 30, 2024 அன்று புதியதலைமுறை வெளியிட்டிருந்த நியூஸ்கார்ட் நமக்குக் கிடைத்தது. அதில், “கன்னியாகுமரி: பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுப்பு. பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திரும்பிச் சென்றார் பொன்.ராதாகிருஷ்ணன்” என்று இடம்பெற்றிருந்தது.
சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – பாம்பன் இடையே கடலில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதன் பின் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் அவர் பங்கேற்றார். ஆனால், வைரலாகும் நியூஸ்கார்டில் கன்னியாகுமரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மேலும் இதுகுறித்த விரிவான செய்திகளை தேடியபோது, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு தியானம் செய்ய வந்த பிரதமர் மோடியைக் காண முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் அவரை திருப்பி அனுப்பியதாக கடந்த மே 2024 வெளியான செய்திகளில் இடம்பெற்றிருந்தது. அதனை இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.
எனவே, கடந்த 2024ஆம் ஆண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தியே தற்போதைய ஒன்று என்பதாகப் பரவுகிறது.
Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் அனுமதி மறுப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By, Puthiyathalaimurai, Dated May 30, 2024
YouTube Video from, Puthiyathalaimurai, Dated May 30, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 25, 2025
Ramkumar Kaliamurthy
May 17, 2024
Ramkumar Kaliamurthy
March 28, 2024