திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025
திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025

HomeFact Checkசீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை  முற்றுகையிட்டனரா?

சீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை  முற்றுகையிட்டனரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை முற்றுகையிட்டனர்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். பெரியாரிய உணர்வாளர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராடியதாக சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ்கார்டை எடிட் செய்தே அந்த நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

“பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமானை கண்டித்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். சீமான் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இந்த நியூஸ்கார்டை நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உட்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.டியோவை பலரும் பகிர்ந்து சீமானை எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர்.

சீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை  முற்றுகையிட்டனர்.

Post Link | Archive Link

சீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை  முற்றுகையிட்டனர்.

Archive Link

சீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை  முற்றுகையிட்டனர்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாட்டிறைச்சி உண்பவர்கள் கீழ்சாதி என்று இழிவாக பேசினாரா சீமான்?

Fact Check/Verification

சீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை  முற்றுகையிட்டதாக பரப்பப்படும் நியூஸ்கார்டில் ‘சலூன் கடையை’ எனும் வார்த்தைகள் மட்டும் வித்தியாசமான எழுத்துருவில் (font) இருப்பதை காண முடிந்தது அதேபோல் தலைப்பு பகுதியில் ‘ச’ எழுத்துக்கு மேல் ஒற்றைக் கொம்பு பாதி அழிந்து இருப்பதை காண முடிந்தது.

சீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை முற்றுகையிட்டனர்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அறிய முடிந்தது.

இதனை தொடர்ந்து வைரலாகும் நியூஸ்கார்டானது சன் நியூஸ் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டில் இருந்ததால் அந்நிறுவனம் இந்த கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்ந்தோம்.

இத்தேடலில் சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டதாக நியூஸ்கார்டு ஒன்றை சன் நியூஸ் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டது என உறுதி செய்ய முடிந்தது.

இதனையடுத்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜை தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: கும்பமேளாவில் ரகசியமாக இரவில் நீராடிய அகிலேஷ் யாதவ் என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா?

Conclusion

சீமானை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் சலூன் கடையை  முற்றுகையிட்டதாக பரப்பப்படும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
X post by Sun News, Dated January 22, 2025
Phone conversation with Manoj Kumar, Digital Head, Sun News


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular