ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

HomeFact Checkஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டு பயணித்தாரா திருமாவளவன்?

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டு பயணித்தாரா திருமாவளவன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே திருமாவளவன் காரில் பயணித்ததாக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் கணக்கில் பதிவிட்டார்.

Fact: வைரலாகும் பதிவு வன்னி அரசு பெயரில் இயங்கும் போலி எக்ஸ் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும். அதேபோல் வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஆடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

“’மன்னர் ஆட்சி’ குறித்து தவறாக பேசிய ஆதவ் அர்ஜுனா வை கட்சியை விட்டு நீக்கிய பின்.. நானும், பேராசான் உம்.. எங்கள் இருவருக்கும் பிடித்த பாடலை கேட்டு மகிழூந்தில் பயணித்தோம்” என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக ஒன் இந்தியா செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே  திருமாவளவன் காரில் பயணித்தார்.
ஒன் இந்தியாவில் வெளிவந்த செய்தி

Article Link | Archive Link

தொடர்ந்து தேடுகையில் சமூக ஊடகங்களில் பலரும் வன்னி அரசு இவ்வாறு ஒரு பதிவை பதிவிட்டதாக வீடியோவுடன் இதே தகவலை பகிர்ந்து வருகின்றனர். அவ்வீடியோவில் விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் உதயநிதியை வாழ்த்தி பாடும் பாடலை கேட்டவாறு காரில் பயணம் செய்வதாய் இருந்தது.

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியபின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே  திருமாவளவன் காரில் பயணித்தார்.

Post Link | Archive Link

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியபின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே  திருமாவளவன் காரில் பயணித்தார்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?

Fact Check/Verification

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே திருமாவளவன் காரில் பயணித்ததாக பரப்பப்படும் இத்தகவலில் இரண்டு தகவல்களை சோதித்து உண்மையறிய வேண்டியுள்ளது.

முதல் தகவல், திருமாவளவன் பயணித்த காரில் உதயநிதியை பாடும் பாடல் ஒலித்ததா, இல்லையா என்பதாகும். இரண்டாவது தகவல், உண்மையிலேயே வைரலாகும் பதிவை வன்னி அரசு பதிவிட்டாரா, இல்லையா என்பதாகும்.

முதல் தகவல் குறித்த உண்மையறிய வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் “மக்கள பாக்குறதுக்காக Car-லையே Lunch சாப்பிட்டு போன Thiruma…!” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து கலாட்டா மீடியா ஃபேஸ்புக் பக்கத்தில் பிப்ரவரி 17, 2023 அன்று செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியில் திருமாவளவன் நேரத்தை மிச்சப்படுத்த ஓடும் காரிலேயே மதிய உணவை சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியபின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே  திருமாவளவன் காரில் பயணித்தார்.

தொடர்ந்து தேடுகையில் ‘நீதி பூங்கா’ எனும் பயனர் ஐடியை கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் “சோறு உண்ண நேரம் இல்லை. அவருக்கு தூக்கம் துளியும் இல்லை….” என்று தலைப்பிட்டு பிப்ரவரி 16, 2023 அன்று இவ்வீடியோ முதன்முதலில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் திருமாவளவனை வாழ்த்தும் பாடலே இடம்பெற்றிருந்தது; உதயநிதியை வாழ்த்தும் பாடலல்ல.

இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஆடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது.

இதனையடுத்து இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோவை பயன்படுத்தி வன்னி அரசு எக்ஸ் கணக்கு பக்கத்தில் பதிவிட்டாரா என ஆராய்ந்தோம். இந்த ஆய்வில் @VannikKural என்ற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் கணக்கில் அப்பதிவு பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியபின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே  திருமாவளவன் காரில் பயணித்தார்.

ஆனால் இந்த எக்ஸ் கணக்கானது வன்னி அரசின் எக்ஸ் கணக்கு அல்ல; அவர் பெயரில் இயங்கும் போலி எக்ஸ் கணக்காகும். வன்னி அரசின் எக்ஸ் கணக்கின் பயனர் ஐடி @VanniKural என்பதாகும். வைரலாகும் பதிவோ @VannikKural எனும் பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. இக்கணக்கின் பயனர் ஐடியில் ஒரு ‘k’ மிகுதியாக உள்ளது.

இதுத்தவிர்த்து இந்த கணக்கின் தன்விவரக் குறிப்பிலேயே அக்கணக்கு ஒரு ‘Parody (போலி/பகடி) கணக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தை காண முடிந்தது.

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியபின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே  திருமாவளவன் காரில் பயணித்தார்.

இதனை தொடர்ந்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசுகையில் வைரலாகும் பதிவு போலிக் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?

Conclusion

ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே  திருமாவளவன் காரில் பயணித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஆடியோவும் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். அதேபோல் வைரலாகும் பதிவு வன்னி அரசு பெயரில் இயங்கும் போலி எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook post from Galatta Media, Dated February 17, 2023
Facebook post from Neethi Poonga, Dated February 16, 2023
X post from Parody account of Vanni Arasu, Dated December 10, 2024
Telephone conversation with Vanni Arasu, Deputy General Secretary, VCK


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular