சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkவர்ண நீதியை தழைக்க வைக்க தான் முதல்வராக தயார் என்று எச்.ராஜா கூறினாரா?

வர்ண நீதியை தழைக்க வைக்க தான் முதல்வராக தயார் என்று எச்.ராஜா கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நான் முதல்வரானால்தான் தமிழ்நாட்டில் போலி சமூகநீதி ஒழிந்து, இந்து வர்ண நீதி தழைக்கும் என்றால் அதற்கு நான் தயார் என்று எச்.ராஜா கூறியதாக IBC தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.  

வர்ண நீதி குறித்து எச் ராஜா கூறியதாக பரவும் பதிவு

Fact Check/ Verification

எச். ராஜா அவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராவார். சர்ச்சைக்குரியப் பேச்சுகளை பேசி, அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாவது இவரது வாடிக்கையாகும்

அதன் வரிசையில் தற்போது,

“நான் முதல்வரானால்தான்தமிழ்நாட்டில் போலி சமூகநீதி ஒழிந்து, இந்து வர்ண நீதி தழைக்கும் என்றால் அதற்கு நான் தயார்”

என்று எச்.ராஜா அவர்கள் கூறியதாக IBC தமிழின் புகைப்படச் செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

https://www.facebook.com/ithellamthavarunga/posts/266296688357827
https://www.facebook.com/rajan.aashish/posts/401676337924795

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

சமூக நீதி குறித்தும் வர்ண நீதி குறித்தும் எச்.ராஜா அவர்கள் பேசியதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைதானா என்பதை அறிய, இதுக்குறித்த செய்தி ஏதேனும் வேறு ஏதாவது ஊடகங்களில் வந்துள்ளதா என்பதைத் தேடினோம்.

ஆனால் நம் தேடலில், எச்.ராஜா அவர்கள் இவ்வாறு பேசியதாக எந்த ஒரு செய்தியும் தென்படவில்லை.

ஆகவே ஆய்வின் அடுத்தக் கட்டமாக, சமூக ஊடகங்களில் IBC  தமிழின் புகைப்படச் செய்தி டெம்ப்லேட் பயன்படுத்தப்பட்டிருப்பதால், IBC தமிழின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வாறு ஒரு செய்தி வந்துள்ளதா என்பதைத் தேடினோம்.

அவ்வாறு தேடியதில், IBC தமிழில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஒரு சான்றும் நமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே இதன் அடிப்படையில் பார்க்கும்போது, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படச் செய்தி ஒருவேளை எடிட் செய்யப்பட்டிருக்காலோமோ எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.  

வைரலாகும் புகைப்படச் செய்தியைக் கூர்ந்து நோக்கியப் பின், அப்புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்றுதான் என்பது நமக்கு தெளிவாகியது.

ஏனெனில் IBC தமிழில் வந்த மற்ற புகைப்படச் செய்திகளில் IBC தமிழின் லோகோ வாட்டர் மார்க்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.  ஆனால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படச் செய்தியில் அந்த வாட்டர் மார்க் தென்படவில்லை.

வாசகர்களின் புரிதலுக்காக IBC தமிழின் புகைப்படச் செய்தியையும், சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Right: IBC Tamil News Card; Left: Viral News card

Conclusion

நான் முதல்வரானால்தான் தமிழ்நாட்டில் போலி சமூகநீதி ஒழிந்து, இந்து வர்ண நீதி தழைக்கும் என்றால் அதற்கு நான் தயார் என்று எச்.ராஜா அவர்கள் கூறியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் IBC தமிழின் புகைப்படச் செய்தி பொய்யானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.  

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/ithellamthavarunga/posts/266296688357827

Facebook Profile: https://www.facebook.com/rajan.aashish/posts/401676337924795

IBC Tamil


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular