புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Check`தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடி பிரச்சாரம் செய்வேன்’ என்றாரா குஷ்பு?

`தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடி பிரச்சாரம் செய்வேன்’ என்றாரா குஷ்பு?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடிக்கூட பிரச்சாரம் செய்யவிருப்பதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Source: Twitter

Fact check/Verification:

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை 5 நாட்களில் அறிவிக்கும்” என்று பேசியிருந்தார்.

இந்த சூழ்நிலையில்தான், தான் சார்ந்திருக்கும் கட்சியான பாஜகவின் ‘தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடி பிரச்சாரம் செய்யவும் தயார்’ என்று அவர் கூறியதாக பிரபல செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்:

தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடிக்கூட பிரச்சாரம் செய்யத் தயார் என்று அவர் கூறியதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய, புதியதலைமுறையின் ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்து பார்த்தோம்.

ஜனவரி 2 ஆம் தேதி என்று வெளியிடப்பட்டிருக்கும் அப்புகைப்படம் புதியதலைமுறையின் ட்விட்டர் பக்கத்தில் இல்லை.

மாறாக, `தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாள்களில் பாஜக அறிவிக்கும்’ என்று குஷ்பு கூறியிருந்த செய்தி ஒன்றே வெளியாகியிருந்தது.

Source: Twitter

மேலும், நம்முடைய உண்மையறியும் சோதனையில் இருக்கும் புகைப்படச் செய்தியில் ‘தயார்’ என்பதற்குப் பதிலாகத் ‘தாயார்’ என்று எழுத்துப் பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, புதிய தலைமுறையின் குறிப்பிட்ட அந்த முதல்வர் வேட்பாளர் குறித்து குஷ்பு பேசியிருந்த செய்தியின் உண்மையானப் புகைப்படத்தை எடுத்து, அதில் செய்தியை மட்டும் போட்டோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருப்பது நமக்குத் தெளிவாகியது.

வாசகர்களுடைய புரிதலுக்காக அந்த இரண்டு புகைப்படச் செய்திகளையும் இங்கே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இடது: உண்மையானப் புகைப்படம், வலது: எடிட் செய்யப்பட்டப் புகைப்படமாகும்.

Conclusion:

எனவே, பாஜக தலைமை கூறினால் குத்தாட்டம் ஆடிக் கூட பிரச்சாரம் செய்யத் தயார் என்று குஷ்பு கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற புகைப்படச் செய்தி பொய்யானது என்பதையும், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதையும் உரிய ஆதாரத்துடன் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Puthiyathalaimurai: https://twitter.com/PTTVOnlineNews/status/1345261881900949504?s=20

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular