வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkஅதிகம் பொய் பேசும் நபராக அருணன் முதலிடம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

அதிகம் பொய் பேசும் நபராக அருணன் முதலிடம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக பரவும் நியூஸ்கார்ட்
Source: Facebook

சமூக வலைத்தளங்களில் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த நியூஸ்கார்டில், இந்தியாவில் அதிகம் பொய் பேசும் நபர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துக்கணிப்பு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக பரவும் நியூஸ்கார்ட்  -1

Facebook Link | Archive Link

அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக பரவும் நியூஸ்கார்ட்  -2

Facebook Link | Archive Link

அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link | Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த நியூஸ்கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுகுறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்ற செய்தியில் அவர் தலையில் கலசம் வைத்துள்ள படத்தை பயன்படுத்தியதா நியூஸ் 7 தமிழ்?

Fact Check/Verification

அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, முதலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. இதன்பின் தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.

இதற்கு அவர்,

“இது போலியான நியூஸ்கார்ட், இதை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை. இதை யாரோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்”

என்று விளக்கமளித்தார்.

இதனடிப்படையில் காணும்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துக்கணிப்பில்  அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பது உறுதியாகின்றது.  

Also Read: சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் கைது; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Conclusion

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துக்கணிப்பில்  அதிகம் பொய் பேசும் நபராக பேராசிரியர் அருணன் முதலிடம் பெற்றதாக கூறி வைரலான தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.  

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Thanthi TV Digital head Testimonial:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular