வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkமும்பை வான்வெளியில் கூடிநின்ற மேகங்களின் புகைப்படமா இது?

மும்பை வான்வெளியில் கூடிநின்ற மேகங்களின் புகைப்படமா இது?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

மும்பை வான்வெளியில் மேகக்கூட்டங்கள் தலையணைகளைப் போல ஒன்று கூடி நிற்கின்றன என்கிற தலைப்புடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை
Source: Facebook

Fact check/Verification:

இயற்கை எப்பொழுதுமே வண்ணமயமான அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது. ஆலங்கட்டி மழை, வானவில், சிவந்த வானம் என்று அதற்கு உதாரணங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

வான்வெளியிலும் அடிக்கடி பஞ்சுப்பொதி போன்று மேகங்கள் கூடி நிற்பதுவும் அற்புதமான இயற்கையின் கோலம்.

ஆனால், சமீபத்தில் அவ்வாறு மும்பை வான்வெளியில் மேகக்கூட்டங்கள் பஞ்சுப்பொதி போன்று கூடி நின்றதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை
Source: Facebook

https://m.facebook.com/GPollakWeather/photos/a.682180311810536/3713222712039599/?type=3&source=48

சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்:

மும்பை வான்வெளியில் மேகங்கள் கூடி நிற்பதாகப் பரவும் அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் தேடி பார்த்தோம்.

அதில், குறிப்பிட்ட அந்த புகைப்படம் உண்மையில் ஒரு டிஜிட்டல் வொர்க் புகைப்படம் என்பதை நம்மால் கண்டறிய முடிந்தது.

அந்த புகைப்படத்தில், பிரெண்ட் ஷ்வ்நோர் என்னும் டிஜிட்டல் வரை கலைஞர், மேகக்கூட்டங்கள் பஞ்சுப்பொதி போன்று முகாம் இட்டிருப்பதாக தன்னுடைய டிஜிட்டல் திறமையால் உருவாக்கியிருப்பது நமக்குத் தெரியவந்தது. கடந்த 2020, ஆகஸ்டு 26 அன்று இந்த டிஜிட்டல் வரைகலை புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/shavnore/photos/a.1241364096197536/1241364072864205/?type=3

மேலும், குறிப்பிட்ட அந்தப் புகைப்படத்தை மேகக்கூட்டங்கள் இன்றி ரிவர்ஸ் சர்ச் செய்தபோது அப்புகைப்படம் தெற்கு மத்திய மும்பைப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது மட்டுமே உண்மை என்பது நமக்குத் தெரிய வந்தது.

Conclusion:

எனவே, மும்பை வான்வெளியில் பஞ்சுப்பொதி போன்ற மேகங்கள் கூடி நின்றதாகப் பரவும் புகைப்படம் உண்மையில் டிஜிட்டல் வரைகலை முறையில் உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

Result: Misleading/Partly False

Our Sources:

Brent Shavnore: https://www.facebook.com/shavnore/photos/a.1241364096197536/1241364072864205/?type=3

India Today: https://www.indiatoday.in/fact-check/story/fact-check-netizens-mistake-artwork-for-cloud-pattern-over-mumbai-1755764-2021-01-04

Twitter: https://twitter.com/Fred_Mills/status/1335926774253973511?s=20

Bolero: https://www.bolero.net/home/panoramic-view-of-south-central-mumbai-at-golden-hour-dusk/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular