செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16, 2024

HomeFact Checkசமுத்திரக்கனி வாக்களிக்கவில்லை என பரவும் வதந்தி

சமுத்திரக்கனி வாக்களிக்கவில்லை என பரவும் வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி அவர்கள் வாக்களிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

சமுத்திரக்கனி குறித்து வெளிவந்தச் செய்தி

கடந்த சில மாதங்களாக ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் மிகவும் பரபரப்புடன் வைத்திருக்க காரணமாக இருந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஒருவழியாக கடந்த செவ்வாய் ( 06/04/2021) அன்று ஒரே கட்டமாக நடந்து முடிவடைந்துவிட்டது.

இந்த தேர்தலில் வெகுஜன மக்கள், பிரபலங்கள் என பலர் வாக்களித்தனர். இத்தேர்தலில் மொத்தமாக 72.76 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை சரியாக செய்தனர்.

ஆயினும் ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, யுவன், ஜி.வி.பிரகாஷ், மணிரத்னம், வெற்றிமாறன், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், கவுண்டமணி, மோகன், கார்த்திக், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, வடிவேலு, விஜயகாந்த், பிரபுதேவா, லாரன்ஸ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, சிவா, சமுத்திரக்கனி, கவுதம் மேனன், கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன், பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் இத்தேர்தலில் வாக்கு செலுத்தவில்லை என்று ஊடகங்களில்  செய்தி ஒன்று வந்துள்ளது.

அச்செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

முக்கிய பிரபலங்கள் வாக்கு செலுத்தாதது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இந்த பட்டியலில் சமுத்திரக்கனியின் பெயர் இருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமுத்திரக்கனி அவர்கள் சமூகப் பொறுப்பு, சமூக ஒழுக்கம் குறித்து தனது படங்களிலும், பொது வெளிகளிலும் தொடர்ந்து பேசி வருபவர். இப்பேர்பட்டவர் வாக்கு செலுத்தவில்லை எனும் தகவலை அறிந்து, பலர் அவரைக் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

சமுத்திரக்கனி குறித்து பரவும் பதிவு - 1

Archieve Link: https://archive.ph/4IV4m

சமுத்திரக்கனி குறித்து பரவும் பதிவு - 2

Archieve Link: https://archive.ph/QfsCz

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சமுத்திரக்கனி அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, இச்செய்தி குறித்து ஆய்வு செய்தோம்.

நம் ஆய்வில்  இந்த செய்தி தவறான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. சமுத்திரக்கனி அவர்கள் ஊடகங்களில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளோர்.

அவ்வீடியோவில்,

“நான் வாக்களிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காலை 6:55 மணிக்கு நடந்தே சென்று நானும் என் மனைவியும் வாக்கைச் செலுத்தினோம்.

முதலில் வாக்களிக்கும் மெஷின் வேலை செய்யவில்லை. அதைச் சரிசெய்ய 40 நிமிடங்கள் ஆனது. அதற்குப் பிறகு 7:40 மணியளவில் முதல் வாக்காகப் பதிவிட்டேன். பின்பு படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டேன்.

நான் வாக்களித்துவிட்டேன் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் நான் வாக்களிக்கவில்லை என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் வாக்களித்து என் கடமையைச் சரியாகச் செய்துவிட்டேன்”.

 என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வீடியோ உங்கள் பார்வைக்காக:

சமுத்திரக்கனி அவர்கள் வெளியிட்ட வீடியோவினைக் காணும்போது, சமுத்திரக்கனி இந்த தேர்தலில்  வாக்களிக்கவில்லை என்று ஊடகங்களில் வந்த செய்தி முற்றிலும் தவறானது என நமக்கு உறுதியாகின்றது.

Conclusion

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சமுத்திரக்கனி அவர்கள் வாக்களிக்கவில்லை என்று ஊடகங்களில் வந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Samuthrakani’s Testimonial:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular