வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkகணினியை இயக்கத் தெரியாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்தனரா அதிமுகவினர்?

கணினியை இயக்கத் தெரியாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்தனரா அதிமுகவினர்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கணினியை இயக்கத் தெரியாத காரணத்தினால் அதிமுகவினர் தமிழ்நாடு பட்ஜெட் உரையை புறக்கணித்தனர் என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கணினியை
Source: Facebook

தமிழகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழகத்தில் முதன்முறையாக பேப்பர் இல்லாத இ-பட்ஜெட்டினை அவர் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுகவினர் புறகணித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், “மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்” என்று நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கணினியை
Source: Facebook

Facebook Link

கணினியை
Source: Facebook

Facebook Link

கணினியை
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

கணினியை இயக்கத் தெரியாததால் அதிமுகவினர் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்தனர் என்று பரவுகின்ற நியூஸ் கார்டு செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்து ஆய்வு செய்தோம்.

குறிப்பிட்ட செய்தி கார்டு புதியதலைமுறை தொலைக்காட்சியைச் சேர்ந்தது என்பதால் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்தோம்.

அப்போது, “பேச வாய்ப்பு தரவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்” என்கிற அவர்களது உண்மையான நியூஸ் கார்டினை எடிட் செய்து குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருப்பது நமக்குத் தெரிய வந்தது.

புதிய தலைமுறையின் டிஜிட்டல் பிரிவில் இதனை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

Facebook

எடிட் செய்யப்பட்டது

Facebook

உண்மையான புகைப்படம்

Conclusion:

கணினியை இயக்கத் தெரியாததால் அதிமுகவினர் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்தனர் என்று பரவுகின்ற நியூஸ் கார்டு செய்தி எடிட் செய்யப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Result: Misleading

Our Sources:

Puthiyathalaimurai: https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/photos/2281460648677497

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular