வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact CheckViralFact Check: ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக பிரமுகரின் மண்டையை உடைத்தனரா பொதுமக்கள்?

Fact Check: ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக பிரமுகரின் மண்டையை உடைத்தனரா பொதுமக்கள்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக பிரமுகரின் மண்டையை உடைத்தனர் பொதுமக்கள்.

Fact: திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது, பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தததாக தந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருந்த செய்தியின் யூடியூப் தம்பனைல் (YouTube Thumbnail) எடிட் செய்யப்பட்டே இத்தகவல் பரப்பப்படுகின்றது.

ஈரோட்டில் ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக ஒன்றிய செயலாளரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஈரோட்டில் ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக ஒன்றிய செயலரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக பரவும் புகைப்படம்
Screengrab from Twitter@IndiraniSudala1
ஈரோட்டில் ஓட்டுக்கு 1000 கூறிவிட்டு 400 கொடுத்த திமுக ஒன்றிய செயலரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக பரவும் புகைப்படம்
Screengrab from Facebook/Subramanian.agri
ஈரோட்டில் ஓட்டுக்கு 1000 கூறிவிட்டு 400 கொடுத்த திமுக ஒன்றிய செயலரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக பரவும் புகைப்படம்
Screengrab from Facebook/psmari.psm

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact check: பாஜக நிர்வாகிகள் மது அருந்தியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Factcheck / Verification

ஈரோட்டில் ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக ஒன்றிய செயலாளரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் இத்தகவல் தந்தி தொலைக்காட்சியின் லோகோவை பயன்படுத்தி பரப்பப்படுவதால், தந்தி தொலைக்காட்சி இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதா என அந்நிறுவனத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில், ‘ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது கல்வீசி தாக்கிய பொதுமக்கள்’ என்று தலைப்பிட்டு அக்டோபர் 28, 2022 அன்று தந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

ஈரோட்டில் ஓட்டுக்கு 1000 கூறிவிட்டு 400 கொடுத்த திமுக ஒன்றிய செயலரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக பரவும் புகைப்படம்
Screengrab from Thanthi TV

திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது, பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டிருந்த யூடியூப் தம்ப்னைல் (YouTube Thumbnail) படத்தை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்படுகின்றது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான தம்பனைலையும் எடிட் செய்யப்பட்ட தம்பனைலையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், அவரும் ”இத்தகவல் பொய்யானது” என்பதை உறுதி செய்தார்.

Also Read: Fact Check: ஆருத்ரா நிதி நிறுவனத்தில் அண்ணாமலைக்கு 100 கோடி ரூபாய் பங்கு என்று பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Conclusion

ஈரோட்டில் ஓட்டுக்கு ₹1000 கூறிவிட்டு ₹400 கொடுத்த திமுக ஒன்றிய செயலாளரின் மண்டையை பொதுமக்கள் உடைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources

Youtube Post from Thanthi Tv Dated October 28, 2022
Phone Conversation with Vinothkumar, Thanthi Tv, Dated March 1, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular