வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkதிமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றாரா திருமாவளவன்?

திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றாரா திருமாவளவன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது.

திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

சேலத்தை அடுத்துள்ள மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்கள் தங்கள் கட்சி கொடியை  நாட்ட முயற்சித்தபோது அவர்களுக்கும் வேற்று சாதியினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளது. இதில் போலீசாரும் விசிகவைச் சேர்ந்தவர்களும் காயமுற்றதாக கூறப்படுகின்ற நிலையில், திமுக சுயசாதி  வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாக வெளிச்சம் ஊடகத்தின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவியது.

திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

Facebook Link

திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

திமுக சுயசாதி வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று  திருமாவளவன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவியதை தொடர்ந்து இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளிச்சம் வெளியிட்டதா என்பதை தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

Also Read: பின்தங்கிய மாநிலங்களுக்காகவும்,தேச நலனுக்காகவும் தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றாரா பிரதமர்?

சேலம் வன்முறை சம்பவத்திற்கு பிறகு விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

Archive Link

இத்தகவலை வெளிச்சம் நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.

Archive Link

அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

வைரலாகும் கார்ட் போலியானது என்பது உறுதியான பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம்.  அதற்கு அவர்,

“இது பொய் செய்தி.  இச்சம்பவம் குறித்த திருமாவளவன் அவர்களின் பேச்சு முழுமையாக பொது வெளியில் உள்ளது”

 என்று பதிலளித்தார்.

இதன்பின் திருமாவளவன் அவர்கள்  போராட்டம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்றை நம்மால் காண முடிந்தது. இதில் அவர் காவல் துறையினரையே கண்டித்து பேசியுள்ளார். திமுக குறித்தோ, திமுகவைச் சார்ந்தவர்கள் குறித்தோ எந்த ஒரு இடத்திலும் பேசி இருக்கவில்லை.

Archive Link

அதேபோல் கடந்த புதனன்று திருமாவளவன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

அப்பதிவில்

செப்-30 சேலத்திலும் அக்-01 மதுரையிலும் நடைபெறவிருந்த விசிக ஆர்ப்பாட்டங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. தனது இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்து சென்னைக்குத் திரும்பியதும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் பேச அழைத்திருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது.”

என்று திருமாவளவன் பதிவிட்டிருந்தார்.

Archive Link

இந்த பதிவைக் காணும்போது திருமாவளவன் அவர்களுக்கும் திமுகவுக்கும் சுமூகமான உறவு முறையே உள்ளது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

Also Read: திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுகின்றதா?

மேற்கிடைத்த ஆதாரங்களின்படி நாம் காணும்போது திமுக சுயசாதி  வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் பேசியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.

Conclusion

திமுக சுயசாதி  வெறியை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று விசிக  தலைவர் திருமாவளவன் கூறியதாக  சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Vanni Arasu Testimonial

Thirumavalvan Tweets

Velicham


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular