வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkபாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாகிஸ்தான் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், “பாகிஸ்தான் வெள்ளம். கடவுளின் சீற்றம். உங்களின் சித்தரவதையால் மாண்டு போன என் தொப்புள் கொடி உறவுகளின் சினம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் நால்வர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மலை உச்சியிலிருந்து கீழே விழுவதாக உள்ளது.

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ

Twitter Link | Archive Link

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ - 01

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மங்களூரில் தொண்டர்கள் ஆரவாரம் செய்ததாக பழைய வீடியோவை பரப்பும் பாஜகவினர்

Fact Check/Verification

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தின் பின்னணி குறித்து அறிய இவ்வீடியோவை ஒவ்வொரு கீ பிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி  ஆய்வு செய்தோம்.

இதில் ஆண்டனா 3 என்கிற ரோமானிய செய்தி சேனலில், ஜூலை 18, 2011 அன்று இந்தியாவில் ஒரு பெரு வெள்ளம் ஒரு குடும்பத்தையே மலை உச்சியிலிருந்து அடித்து சென்று விட்டது என்று  செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ - 03
Courtesy: Antena3

இதனையடுத்து உரிய கீ வேர்டுகளை பயன்படுத்தி தேடியதில் ‘Patalpani Tragedy Was Man Made’ என்று தலைப்பிட்டு இந்தியா டிவி வெளியிட்ட செய்தி ஒன்றை காண முடிந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பாதல்பனி பகுதியில் நடைப்பெற்றது என்பதை அறிய முடிகின்றது.

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ - 04
Courtesy: India TV

இந்தியா டிவி வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் பார்க்கையில், பாதல்பனி அருகில் உள்ள 27 கிராமங்களுக்கு நக்கேரி அணியிலிருந்து கால்வாய் மூலமாக குடிநீர் வழங்கப்படுகின்றது. அணையில் ஏற்பட்ட கசிவு காரணமாக பராமரிப்பு பணிக்காக அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அந்நேரத்தில் கால்வாயை கடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் அடித்துச் செல்லப்பட்டு மலை உச்சியிலிருந்து கீழே விழுந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

இந்தியா டிவியைத் தவிர்த்து மேலும் சில ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Also Read: பாகிஸ்தான் இராணுவத் தளபதி  மகனுடன் ஜெய் ஷா சந்திப்பு என்று பரவும் படம் உண்மையானதா?

Conclusion

பாகிஸ்தான் வெள்ளத்தில் நால்வர் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோவில் காணப்படும் சம்பவம், உண்மையில் பாகிஸ்தானில் நடந்தது அல்ல, அது இந்தியாவின் இந்தூரில் நடந்தது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் உருது மற்றும் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)

Result: False

Sources

Media Report Published by antena.com on 18 July 2011
Media Report Published by NDTv on 18 July 2011
Media Report Published by India Tv on 22 July 2011


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular