வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkசெல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; வைரலாகும் தகவல் உண்மையானதா?

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழப்பு; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக பரவும் தகவல்

‘நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் போது செல்போன் மூலமாக மின்சாரம் இழுக்கப்பட்டு உயிர் சேதம். ஆகவே நடைமேடையில் மஞ்சள் நிற கோட்டிற்கு அருகில் செல்ல வேண்டாம்’ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக பரவும் தகவல் - 01
Screenshot from Twitter @hyderali857685
செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக பரவும் தகவல் - 02
Screenshot from Facebook / Abinav Mitraa
செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக பரவும் தகவல் - 03
Screenshot from Facebook / sridhar.mini

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மாண்டஸ் புயலால் மெரினா கடற்கரை முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதாக பரவும் வீடியோ!

Fact Check/Verification

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் இரயில்வே அதிகாரி ஆனந்த் ருப்பனகுடி என்பவர் இச்சம்பவம் குறித்து டிசம்பர் 8, 2022 அன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் ஒன்றை செய்திருந்ததை காண முடிந்தது.

அந்த டிவீட்டில், மேற்கு வங்கத்தின் கோரக்பூரில்  மின்சார கேபிள் அறுந்து, டிக்கெட் பரிசோதகர் தலையில் விழுந்தததால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டார், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைப்பெற்று வருகின்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தேடியதில் நக்கீரனில் ‘டி.டி.ஆர். மீது விழுந்த உயர் அழுத்த மின்சார வயர்; அதிர்ச்சி வீடியோ வைரல்’ என்று தலைப்பிட்டு  இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் விபத்துக்குள்ளான டிக்கெட் பரிசோதகர் உயிர் பிழைத்துள்ளார் என்றும் அவர் தற்போது நலமாக உள்ளார் என்றும் கோரக்பூர் ரயில்வே தலைமை அதிகாரி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக பரவும் தகவல் - 04
Screengrab from Nakkeeran

இச்சம்பவம் குறித்து மேலும் சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனையடுத்து கோரக்பூர் ரயில்வே நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ்குமாரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டோம். அவர் ஜீ 24 யூடியூப் சேனலில் வந்த செய்தியை நமக்கு பகிர்ந்தார். அச்செய்தியில், கூடுதல் பிரிவு ரயில்வே மேலாளர் முகமது ஷுஜாத் ஹாஷ்மி விபத்துக்குள்ளான டிக்கெட் பரிசோதகர் சர்தார் சுஜாத் சிங் நலமாக உள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் படி தெளிவாகுவது யாதெனில்,  வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபரை மின்சாரம் தாக்கியது உண்மையே. ஆனால் அந்த மின்சாரமானது செல்போனால் கவரப்பட்டது அல்ல, அது அறுந்து விழுந்த மின்சார ஒயரிலிருந்து வந்தது. அதேபோல் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர் உயிருடன் நலமாக உள்ளார். வைரலாகும் பதிவுகளில் குறிப்பிட்டிருப்பதுபோல் உயிரிழக்கவில்லை.  

Also Read: வந்தே பாரத் ரயிலின் ஏசியிலிருந்து நீர் ஊற்றியதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!

Conclusion

செல்போன் மூலம் மின்சாரம் கவரப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources

Tweet from @Ananth_IRAS, Dated December 08, 2022
Article by Nakkeeran, Dated December 12, 2022
Contact with Khargapur Railway Division PRO Rajesh Kumar
Conversation with DRM Kharagpur Office


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular