வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckPoliticsவிஜய் மல்லையா பாஜகவுக்கு 35 கோடி அளித்தாரா?

விஜய் மல்லையா பாஜகவுக்கு 35 கோடி அளித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கடன் ஏய்ப்பு குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா பாஜகவுக்கு 2016 ஆம் ஆண்டு 35 கோடி நிதியாக கொடுத்ததாகக் கூறி காசோலை ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விஜய் மல்லையா குறித்து பரவும் புகைப்படம்
Source: Facebook

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் வெற்றியைப் பெற கடுமையாக உழைத்து வருகின்றார்கள்.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறத்தில் ஒவ்வொரு கட்சியையும் மற்றும் கட்சியினரையும் குறித்து பல விதமான பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டு  வருகின்றது. இவற்றை நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து, அவற்றின் உண்மைத்தன்மை குறித்து வாசகர்களாகிய உங்களுக்கு தொடர்ந்து விளக்கி வருகின்றோம்.

இவ்வரிசையில் தற்போது 2016 ஆம் ஆண்டு விஜய் மல்லையா பாஜகவுக்கு 35 கோடி ரூபாயை நிதியாக  கொடுத்ததாகக் கூறி காசோலை ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விஜய் மல்லையா குறித்து பரவும் பதிவு - 1
Source: Facebook

Archive Link: https://archive.ph/jldkd

விஜய் மல்லையா குறித்து பரவும் பதிவு - 2
Source: Facebook

Archive Link: https://archive.ph/684DD

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.   

Fact Check/Verification

விஜய் மல்லையா பாஜகவுக்கு ரூ.35 கோடி நிதியாக அளித்ததாகக் கூறி பரப்பப்படும் காசோலையை கூர்மையாக ஆராய்ந்தோம். இந்த ஆய்வில்  வைரலாகும் காசோலை போலியான ஒன்று என்பது நமக்கு நிரூபணமானது.

கீழ்க்காணும் தரவுகளின் அடிப்படையிலேயே வைரலாகும் காசோலை போலியானது என நாங்கள் உறுதி செய்தோம்.

தரவு 1: வைரலாகும் காசோலையில், பாஜகவின் பெயரில் எழுத்துப்பிழை உள்ளது. Bharatiya Janata Party என்பதற்கு பதிலாக Bhartiya Janta Party என்று எழுதப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா குறித்து பரவும் பதிவு குறித்த ஆதாரம் - 1

தரவு 2: காசோலையில் இருக்கும் விஜய் மல்லையாவின் கையெழுத்து  விஜய் மல்லையாவின் கையெழுத்தே கிடையாது . அது  போலியானதாகும்.

விஜய் மல்லையாவின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பதிவிட்ட்டுள்ளார்.

இக்கடிதத்தில் உள்ள கையெழுத்து வைரலாகும் கடிதத்தில் இருக்கும் கையெழுத்தோடு ஒத்துபோகவில்லை.

விஜய் மல்லையா குறித்து பரவும் பதிவு குறித்த ஆதாரம் - 2

தரவு 3: வைரலாகும் காசோலையில்  2016 ஆம் ஆண்டு நவம்பர் 08 (08/11/2016) என்று தேதியிடப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா குறித்து பரவும் பதிவு குறித்த ஆதாரம் - 3

ஆனால் மார்ச் 2 2016 (02/03/2016) அன்றே மல்லையா இந்தியாவை விட்டே வெளியேறி விட்டார்.

விஜய் மல்லையா குறித்து பரவும் பதிவு குறித்த ஆதாரம் - 4
Source: The Hindu

Conclusion

விஜய் மல்லையா பாஜகவுக்கு 2016 ஆம் ஆண்டு 35 கோடி நிதியாக கொடுத்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் காசோலையின் புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

The Hindu: https://www.thehindu.com/news/national/vijay-mallya-has-left-india-centre-informs-sc/article8331337.ece

Vijay Mallaya’ s Twitter Handle: https://twitter.com/TheVijayMallya/status/1011557284521152512

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular