Claim: போதை உச்சத்தில் ஏறி விட்டது தமிழகத்தில் வீரன் செய்யும் வேலை போல
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதாகும்.
திமுக ஆட்சியில் குடிபோதையில் ஒருவர் சாலையில் கலாட்டா செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“போதை உச்சத்தில் ஏறி விட்டது தமிழகத்தில் வீரன் செய்யும் வேலை போல… திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மக்கள் விரோத திமுக” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?
Fact Check/Verification
திமுக ஆட்சியில் குடிபோதையில் ஒருவர் சாலையில் கலாட்டா செய்வதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 19, 2020 அன்று ”குடிகார இளைஞரின் ரகளை” என்று இந்த வீடியோ யூடியூபில் இடம்பெற்றிருந்தது.
மேலும், நவம்பர் 2020ல் தினத்தந்தி இதுகுறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. அதன்படி, சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் குடிபோதையில் கூச்சலிட்ட இந்த நபர் பெயர் வெங்கடேசன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காவல்துறை அவர் பெயரில் வழக்கு பதிவு செய்து பின்பு எச்சரித்து அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றபோது திமுக ஆட்சியில் இருக்கவில்லை. 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயித்தே திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது; சம்பவம் நடைபெற்ற ஆண்டில் ஆட்சியில் இருந்தது அஇஅதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?
Conclusion
திமுக ஆட்சியில் குடிபோதையில் ஒருவர் சாலையில் கலாட்டா செய்வதாகப் பரவும் வீடியோ கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video from the user, First News TN | Real News 360, Dated November 19, 2020
News Report from Daily Thanthi, Dated November 19, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)