திங்கட்கிழமை, மே 6, 2024
திங்கட்கிழமை, மே 6, 2024

HomeFact Checkதேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தேர்தல் முடிந்தது.மதுரவாயலில் அம்மன் கோவில் இடிக்கப்பட்டது

Fact: வைரலாகும் வீடியோவில் இடிக்கப்பட்ட கோயில் தனியார் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் அகற்றப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் தமிழக அரசால் இடிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“தேர்தல் முடிந்தது.மதுரவாயலில் அம்மன் கோவில் இடிக்கப்பட்டது” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

தேர்தல் முடிந்ததும்
Screenshot from x @suravitha

X Link/Archived Link

Screenshot from x @SureshKangayan

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா நடிகர் அல்லு அர்ஜுன்?

Fact Check/Verification

தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் தமிழக அரசால் இடிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ செய்தி “News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7” என்கிற ஊடகப்பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு சாந்தி முனிரத்தினம் என்னும் தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சென்னை மதுரவாயலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த நாகாத்தம்மன் கோயில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்கள் போராட்டத்தின் அடிப்படையில் சாந்தி முனிரத்தினம் ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு நிலத்தின் 4 அடியும் அகற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Also Read: உயர்சாதி பெண்களை பறையர் இன ஆண் மணந்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்ததா?

Conclusion

தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் தமிழக அரசால் இடிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Twitter post from, @NewsTamilTV24x7, Dated April 23, 2024
Report from Dinakaran, Dated April 23, 2024



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular