Sunday, March 16, 2025
தமிழ்

Fact Check

Fact Check: தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து நிற்பதாகக் கூறினாரா வானதி சீனிவாசன்?

banner_image

Claim
வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள். தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்கின்ற அவலமான காலகட்டத்தில் தமிழகத்திற்கான உழைப்புத் தேவையை நிறைவேற்றுபவர்கள் வடநாட்டவர்தான்.


Fact
வைரல் நியூஸ்கார்ட் போலியானதாகும். வட மாநிலத்தவர்கள் மீது வெறுப்புணர்வை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக வானதி சீனிவாசன் பேசியிருந்தார்.

தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து நிற்பதாகவும், வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள் எனவும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள். தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்கின்ற அவலமான காலகட்டத்தில் தமிழகத்திற்கான உழைப்புத் தேவையை நிறைவேற்றுபவர்கள் வடநாட்டவர்தான். அவர்களுக்கு வாக்குரிமை அளித்து அவர்களை இங்கேயே நிரந்தரமாக குடியேற்ற வழி செய்யவேண்டும்” என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @muruganmp051
Screenshot from Facebook/vcktenkasiyalar.varghese

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: தமிழகத்தில் இந்தி பேசும் வடஇந்தியர்களை தாக்கிக் கொல்வதாக வடமாநிலங்களில் பரவும் வதந்தி!

Fact Check/Verification

தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து நிற்பதாகவும், வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள் எனவும் வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள பீகார் உள்ளிட்ட வட இந்திய தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டினர் தாக்குதலில் ஈடுபடுவதாக அடுக்கடுக்காக வதந்தி வீடியோக்கள் மற்றும் போலிச்செய்திகள் பரவிய நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க. வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள், தனி மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களில் அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை முதலமைச்சர் உறுதிப்படுட்த வேண்டும்.” என்று கூறியிருந்தார். இதனை ஜூனியர் விகடன் நியூஸ்கார்டாக வெளியிட்டுள்ளது.

அந்த நியூஸ்கார்டிலேயே தற்போது எடிட் செய்யப்பட்டு வானதி சீனிவாசன் தமிழர்கள் அனைவரும் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்ப்பதாக பேசியதாகப் பரவுகிறது.

Altered News Card
Original News Card

இதுகுறித்து ஜூனியர் விகடன் தரப்பில் அதன் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், ”வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.

வைரலாகும் செய்தி குறித்து நாம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் கேட்டதைத் தொடர்ந்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாகும் செய்தி ”போலியானது” என்று பதிவிட்டுள்ளார்.

Also Read: Fact Check: மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவல் உண்மையா?

Conclusion

தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து நிற்பதாகவும், வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள் எனவும் வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post From, Vanathi Srinivasan, Dated March 07, 2023
Facebook Post From, Junior Vikatan, Dated March 04, 2023
Phone Conversation With, I.Britto, Junior Vikatan Digital Editor


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.