Friday, March 21, 2025
தமிழ்

Fact Check

தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை இவர்கள் இல்லையென்றால் வரும் என்றாரா ராஜேந்திர பாலாஜி?

banner_image

தமிழர்கள் பலரும் மார்வாடிகள் இல்லையென்றால் பிச்சை எடுத்திருக்கும் நிலை வந்திருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழர்கள்
Source: Facebook

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் பிசியாக உள்ளன. இந்நிலையில், கட்சித் தலைவர்கள் சொன்னதாகப் பல்வேறு புரளிகளும் வதந்திகளும் கூட சூடு பிடித்து வருகின்றன.

மத்தியில் ஆளும் பாஜக, அதிமுகவின் உதவியுடன் எப்படியாவது தமிழகத்தை பிடித்து விட வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக அமைச்சர்களைக் குறிவைத்து வதந்தி அம்புகளும் சமூக வலைத்தளங்களில் பாய்ந்து வருகின்றனர்.

அதில் ஒன்றாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும்” என்று கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழர்கள்
Source: Facebook

Link: https://www.facebook.com/kpm.sikkandar.5/posts/763117001302629

தமிழர்கள்
Source: Twitter

Archived Link: https://archive.vn/TIQfe

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

தமிழர்கள் பலர், மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பிச்சை எடுக்க நேர்ந்திருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

ஆனால், அவர் அவ்வாறு கூறியதாக எந்தவித செய்தியும் முன்னணி ஊடகங்களிலும் வெளியாகவில்லை.

தொடர்ந்து, தந்தி டிவியின் நியூஸ் கார்ட் போன்று குறிப்பிட்ட புகைப்படம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அதன் சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆராய்ந்து பார்த்தோம்.

அதில், “அதிமுக-திமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றால் கமல்ஹாசன் வேறு நாட்டிற்குதான் செல்ல வேண்டும்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய நியூஸ் கார்ட் பிப்ரவரி 29 ஆம் தேதியன்று வெளியாகியிருந்தது.

தமிழர்கள்
Source: Facebook

https://www.facebook.com/ThanthiTV/photos/a.372693046192379/2808334892628170/?type=3&theater

குறிப்பிட்ட அந்த புகைப்படச் செய்தியை எடிட் செய்தி மார்வாடிகள் மற்றும் தமிழர்கள் குறித்து அமைச்சர் பேசியதாகப் போலியான அந்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனை, தந்தி டிவியிலும் கேட்டு நாம் உறுதிப் படுத்திக் கொண்டோம்.

Conclusion:

தமிழர்கள் பலரும் மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பிச்சை எடுக்கும் நிலை வந்திருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்; சித்தரிக்கப்பட்டதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources:

Thanthi Tv FB: https://www.facebook.com/ThanthiTV/photos/a.372693046192379/2808334892628170/?type=3&theater

Thanthi Tv

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,500

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.