Thursday, April 24, 2025

Fact Check

மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றாரா அண்ணாமலை?

banner_image

Claim: NLC மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் – அண்ணாமலை

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும்; புதிய தலைமுறை இதை தெளிவு செய்துள்ளது.

“மக்கள் பத்து வருடங்களுக்கு முன்பே நிலங்களை மத்திய அரசின் என்எல்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்துவிட்டார்கள்; இன்றுவரை அதிலிருந்து வெளியேறாமல் இருப்பதே தவறுதான். மக்கள் வெளியேறாவிட்டால் மத்திய அரசின் உதவியோடு என்எல்சி நிர்வாகம் விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

NLC மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றாரா அண்ணாமலை? நிர்வாகம் மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@sivanis1999

Twitter Link | Archived Link

என்.எல்.சி. நிர்வாகம் மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook/dineshkumarstar.dineshkumarstar

Archived Link

என்.எல்.சி. நிர்வாகம் மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்
Screenshot from Facebook//mohan.samikkannu

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று கேள்வி எழுப்பினாரா சீமான்?

Fact Check/Verification

NLC நிர்வாகம் மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள ஜூலை 27 ஆம் தேதி வைரலாகும் மேற்கண்ட நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லைஎன்று பதிலளித்தார்.

தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். இத்தகவல் பொய்யானது என்று அவரும் தெளிவு செய்தார்.

தொடர்ந்து தேடுகையில், “நெய்வேலியில் தமிழக அரசு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுக்குறித்து நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் திரு. பிரசன்னகுமார் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு, சுமூகமான தீர்வு எட்டுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொண்டேன்” என்று அண்ணாமலை டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.

Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?

Conclusion

NLC நிர்வாகம் மத்திய அரசின் உதவியோடு விளைநிலங்களை கையகப்படுத்த வேண்டும் அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai

Phone Conversation with SG Suriya, State Secretary, BJP
Tweet from Annamalai, State President, BJP


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,898

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage