Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் இலங்கையில் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டார்.
Fact: வைரலாகும் வீடியோவிலிருப்பவர் இந்திய சாமியாரல்ல; அவர் இலங்கையைச் சார்ந்த புத்த பிக்கு ஆவார்.
“உத்தரகண்ட் மாநிலம் தேவதை பூமி இங்கு முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் வாழக்கூடாது. இந்தியா இந்துநாடாக வேண்டும் என ஊடகங்களில் கூறிய மேற்கண்ட சங்கி சாமியார் இலங்கை சொகுசு விடுதியில் விபச்சார அழகிகளுடன் இருந்த போது சிக்கினான்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இவ்வீடியோவில் இரண்டு காட்சிகள் இடம்பெற்றுள்ளது. முதல் காட்சியில் இரண்டு பெண்களுடன் இருக்கும் சாமியார் ஒருவரை பொதுமக்கள் தாக்குகின்றனர். மற்றொரு காட்சியில் காவி உடையிலிருக்கும் சாமியார் ஒருவர் உத்தரகாண்ட் இந்து மதத்தினருக்கு சொந்தமானது என்று மதவாத பேச்சுகின்றார். இந்த இரு காட்சிகளிலும் காணப்படும் சாமியார்கள் இருவரும் ஒருவரே என்று குறிப்பிட்டு வைரலாகும் இவ்வீடியோ பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?
உத்தரகாண்டில் மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் இலங்கையில் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக மதவாத கருத்துகளை பேசும் காவி உடையணிந்த சாமியார் குறித்து தேடினோம். இத்தேடலில் அந்த சாமியார் பெயர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் என்பதும், இவர் சங்கராச்சாரியா பரிஷத் எனும் அமைப்பின் தலைவர் என்பதும் தெரிய வந்தது.
இந்நபர் தொடர்ந்து மதவாத கருத்துகளை பொதுவெளியில் பேசி வருவதையும் காண முடிந்தது.
இதனையடுத்து பொதுமக்களால் சாமியார் தாக்கப்படும் சம்பவம் குறித்து குறித்து ஆராய்ந்தோம். இதில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் இலங்கையில் நடந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அடிபடும் சாமியார் இலங்கையை சார்ந்த புத்த பிக்கு என்பதும், அவர் பெயர் பல்லேகம சுமன தேரர் என்பதும் இச்செய்தியின் வழியாக தெரிய வந்தது.
இதுத்தவிர்த்து, ஈடிவி பாரத், ஐபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்ளும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அந்த செய்திகளும் பொதுமக்களால் தாக்கப்படுபவர் பல்லேகம சுமன தேரர் என்றே தெரிவித்திருந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இரண்டு காட்சிகளில் இருக்கும் இரண்டும் சாமியார்களும் ஒருவரல்ல; அவ்விருவரும் வெவ்வேறானவர்கள் என்று தெளிவாகின்றது.
இதன்மூலம் உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டதாக பரவும் தகவல் தவறானது என அறிய முடிகின்றது.
Also Read: மணிப்பூரில் கொலை செய்யப்பட்ட கிறிஸ்துவ பெண் எனப்பரவும் பிரேசில் வீடியோ!
உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் இலங்கையில் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Sanatan Prabhat
Report from News 18 Urdu
Report from Hindustan times Tamil
Report from ETV Bharat
Report from IBC Tamil
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 19, 2025
Ramkumar Kaliamurthy
June 18, 2025
Ramkumar Kaliamurthy
June 12, 2025