Tuesday, April 22, 2025
தமிழ்

Fact Check

பிரதமர் மோடியின் முன்பு அமர்ந்திருப்பவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளர் என்று பரவும் வதந்தி!

banner_image

பிரதமர் மோடி நின்றிருக்க அவர் முன்பாக அமர்ந்திருப்பவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளர் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பிரதமர் மோடி
Source: Facebook

தமிழ்நாட்டில் ஒளிப்பரப்பாகும் ஜீ குழுமத் தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் சேனலில் குழந்தைகளுக்கான ரியாலிட்டி காமெடி ஷோ ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஷோவில் சமீபத்தில் இரண்டு குழந்தைகள் இடம் பெற்ற அரசர்-அமைச்சர் காமெடி நாடகத்தில் பிரதமர் மோடியை அவமானப்படுத்தும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றிருந்தன என்பதாக தமிழ்நாடு பாஜக குற்றம் சாட்டியிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சேனலிடம் விளக்கம் கேட்டு ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகமும் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி
Source: Twitter

இந்நிலையில், “உக்காந்திருக்கவர் தான் Zee tamil tv ஓனராம். படம் சொல்லும் செய்தி. சவால் விட்ட ஆட்டோட நிலைமை” என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பிரதமர் மோடி
Source: Facebook

Facebook Link

பிரதமர் மோடி
Source: Facebook

Facebook Link

பிரதமர் மோடி
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உத்திரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் கங்கையில் உயிரை விடுவேன் என்றாரா செந்தில் வேல்?

Fact check/Verification

பிரதமர் மோடியின் முன்பு அமர்ந்திருப்பவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளர் என்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது குறிப்பிட்ட புகைப்படத்தில் அமர்ந்திருப்பவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்பது தெரிய வந்தது.

இந்திய பங்கு வர்த்தக முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியன்று தனது மனைவி ரேகா ஜுன்ஜுன் வாலாவுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார்.

அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Source: Twitter

அதே நாளில், பிரதமர் மோடி மற்றும் ரேகா நின்றிருக்க ராகேஷ் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அப்போதே அக்குறிப்பிட்ட புகைப்படம் குறித்த சர்ச்சைகளும் எழுந்தது.

இதுகுறித்து பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியில், குறிப்பிட்ட நிகழ்வு குறித்து விளக்கமளித்திருந்த பிரதமர் அலுவலக அதிகாரிகள் “ஜுன்ஜுன்வாலா கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றிலும் பாதிக்கப்பட்டு மீண்ட அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஷூ மற்றும் சக்கர நாற்காலியை உபயோகிக்கிறார்.

அவர் பிரதமரை சந்தித்தபோது அவர் அணிந்திருந்த ஷூவை பார்த்துவிட்டு பிரதமர் மோடிதான் அவரை எழுந்து நிற்க வேண்டாம் என்று கூறி நலம் விசாரித்தார்” என்பதான விளக்கம் இடம்பெற்றுள்ளது. எனவே, குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இருப்பது ஜீ குழும செய்தி நிறுவனங்களின் உரிமையாளர் இல்லை என்பது உறுதியானது.

ஜீ குழும செய்தி நிறுவனங்களின் உரிமையாளர் சுபாஷ் சந்திரா கோயங்கா என்பதையும் நாம் உறுதி செய்து கொண்டோம்.

பிரதமர் மோடி
Source: Twitter

சுபாஷ் சந்திரா பாஜக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: YouTube

தனது சொத்துக்களை இவர் தனது மகன்களான அமித் மற்றும் புனித் ஆகியோருக்கு பகிர்ந்து அளித்துவிட்டார். தற்போது ஜீ எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாகி மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இவரது மகன் புனித் கோயங்கா.

எனவே, பிரதமர் மோடியின் முன்பு அமர்ந்திருக்கும் ஜீ தமிழ் சேனல் உரிமையாளர் என்பதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானது; அவர் உண்மையில் இந்திய பங்கு வர்த்தக முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன் வாலா என்பதும், ஜீ குழும உரிமையாளர் உண்மையில் சுபாஷ் சந்திரா கோயங்கா என்பதும் இதன்மூலம் உறுதியாகிறது.

ராகேஷ் ஜுன்ஜுன் வாலா

சுபாஷ் சந்திரா கோயங்கா

Conclusion

பிரதமர் மோடியின் முன்பு அமர்ந்திருப்பவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளர் என்பதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Bollywood Life

The Hindu

Business Today.In

Subhash Chandra

BBC Tamil

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.