Thursday, March 20, 2025
தமிழ்

Fact Check

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதா?

banner_image

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாப்பட்டதாக பரவும் வீடியோ
Screenshot from Twitter @asornamohan
கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாப்பட்டதாக பரவும் வீடியோ - 01
Screenshot from Twitter @Vinothkumar2214
கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாப்பட்டதாக பரவும் வீடியோ - 02
Screenshot from Twitter @Rav25732408

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக வதந்தி!

Fact Check/Verification

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று  வைரலானதை தொடர்ந்து, அந்த வீடியோவை ஒவ்வொரு கீ பிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில்  வைரலாகும் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

சீனாவின் பெய்ஜிங்கை அடிப்படையாக கொண்டு இயங்கும் செய்தி நிறுவனமான CGTN வெளியிட்ட செய்தியில்  சீனாவின் குவாங்ஸி பகுதியில் 700 மீட்டர் நீளத்தில் 80 மூங்கில் தோணிகளை இணைத்து இப்படகு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாப்பட்டதாக பரவும் வீடியோ - 03

தொடர்ந்து தேடியதில் ‘குவாங்ஸி சைனா’ எனும் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை காண முடிந்தது. அதில் 12ஆவது சீன சுற்றுலா தினத்தை முன்னிட்டு இந்த படகு உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு கேரளாவின் தீபத்ஸவம் அல்ல, சீனாவின் குவாங்ஸி பகுதியில்12ஆவது சீன சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு. அதேபோல் 240 படகு என பரவும் தகவலும் தவறு. உண்மையில் அது 80 மூங்கில் தோணிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரே படகு.

Also Read: மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா?

Conclusion

கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது.

Result: False

Sources

Image analysis
CGTN report, May 31, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,500

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.