வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkமோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா?

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட்

‘சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைப்பெறுவதால், அதை தாங்கிக்கொள்ள முடியாத பாஜகவினர் நான் பேசும்போது ஏற்படும் சிறு வார்த்தை பிழைகளை கேலி செய்கிறார்கள். மோடி இதுவரை எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என பாஜகவினர் சிந்திக்க வேண்டும்’ என்று சென்னை மேயர் பிரியா ராஜன் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் - 01
Screenshot from Twitter @MersalRagu7
மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் - 02
Screenshot from Facebook /yasin.basha.758
மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் - 03
Screenshot from Facebook / Sureshonline

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நடிகர் சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை பாலியல் புகாரளித்ததாக வதந்தி!

Fact Check/Verification

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்றை வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக சென்னை மேயர் பிரியா இவ்வாறு பேசியுள்ளாரா என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் சமீபத்தில் இவர் கலந்துக்கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை காண முடிந்தது. இச்சந்திப்பில் எந்த ஒரு இடத்திலும் பிரதமர் குறித்து மேயர் பேசி இருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வைரலாகும் தகவல் சன் நியூஸ் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயனபடுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இதில் இவ்வாறு நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

வைரலாகும் நியூஸ்கார்டை  உற்று நோக்கியதில் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துரு (Font)  சன் நியூஸ் வழக்கமாக பயன்படுத்தும் எழுத்துருவிலிருந்து மாறுபட்டிருந்ததை காண முடிந்தது. அதேபோல் அந்த நியூஸ்கார்டின் எழுத்து பகுதியில்  சன் நியூஸின் வாட்டர்மார்க் லோகோ அழிக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் - 04

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதா எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜ் அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என தெளிவுப்படுத்தினார்.

Also Read: அனைவருக்கும் செல்வத்தை தரும் மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக வதந்தி!

Conclusion

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

YouTube Video, from Kalaignar TV News, on November 13, 2022
Phone Conversation with Monoj, Digital Head, Sun News, on November 14, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular