Tuesday, April 22, 2025
தமிழ்

Fact Check

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்றாரா கனிமொழி?

banner_image

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா குழுமம் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் செய்தி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று கனிமொழி கூறியதாக செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது.

இச்செய்தி காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை திமுக தொடர்புடையவர்கள் வாங்கவிருப்பதாகவும், மறுபடியும்  ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு சுற்றுப்புறத்தை மாசு செய்யவிருப்பதாகவும் பல யூகங்கள் சமூக வலைத்தளங்களில் உலவி வருகின்றது.

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று கனிமொழி கூறியதாக பரவும் தகவல் - 01

Twitter Link | Archive Link

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று கனிமொழி கூறியதாக பரவும் தகவல் - 02

Facebook Link

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று கனிமொழி கூறியதாக பரவும் தகவல் - 03

Facebook Link

Also Read: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் ஊக்கத்தொகை அறிவித்துள்ளாரா பிரதமர்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியதாக தகவல் ஒன்று வைரலாகியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

தந்தி தொலைக்காட்சியின் செய்தியை அடிப்படையாக வைத்தே வைரலாகும் இத்தகவல் பரவி வருவதால் தந்தி தொலைக்காட்சி இச்செய்தியை வெளியிட்டுள்ளதா என தேடினோம்.

இதில் “ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும்” என்று கனிமொழி கூறியதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

Thanthi Tv Tweet

Twitter Link | Archive Link

இதனைத் தொடர்ந்து, இச்செய்தி குறித்து முழுமையாக அறிய, அச்செய்தியுடன் இணைக்கப்பட்டிருந்த யூடியூப் லிங்கை கிளிக் செய்தோம். இதன்பின் யூடியூப் தளத்தில் இந்த லிங்குக்கான வீடியோ திறக்கப்பட்டது. ஆனால் அங்கு, “ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து நடத்தப்படக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது” என்று கனிமொழி கூறியதாக தலைப்பிட்டு இவ்வீடியோ வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Source: Thanthi Tv

அந்த வீடியோவை தொடர்ந்து ஆய்வு செய்ததில், ஸ்டெர்லைட் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று எவ்விடத்திலும் கனிமொழி கூறி இருக்கவில்லை.

மாறாக,  இப்போது இருக்கும் நிலையில் அந்நிறுவனத்தை எக்கு உருக்காலையாக நடத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.  ஆகையால் ஆலையை யார் வாங்கினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேறு ஒரு நிறுவனமாக இருந்தால் திமுக அரசு ஆட்சேபிக்காது. ஆனால் மறுபடியும்  எக்கு உருக்காலையாகவோ, மக்கள் எதிர்க்கக்கூடிய, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த நிறுவனமும் அங்கு வந்துவிடக் கூடாது என்பதே தூத்துக்குடி மக்களவை உறுப்பினரான எனது நிலைப்பாடு” என்றே கனிமொழி கூறியுள்ளார்.

நமக்கு இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட தெளிவில்லாத தவறான தலைப்பே சமூக வலைத்தளங்களில் பரவும் யூகங்களுக்கு அடிப்படையாக விளங்கியுள்ளது என்பதை அறிய முடிகின்றது. இதன்பின் தந்தி தொலைக்காட்சி இச்செய்திக்கான தலைப்பை திருத்தியுள்ளதையும் நம்மால் காண முடிகின்றது.

இதனைத் தொடர்ந்து கனிமொழி அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் சர்ச்சை குறித்து விசாரித்தோம். இதற்கு அவர், வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை விற்பதற்கு முதலில் நீதிமன்றம் சம்மதிக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் அனுமதித்து,  மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஒரு நிறுவனம் அங்கு வந்தால் அதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. ஆனால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்த நிறுவனத்தையும் எங்களால் அனுமதிக்க முடியாது” என்று பதிலளித்தார்

Also Read: அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றாரா பாஜக நிர்மல் குமார்?

Conclusion

ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Youtube video uploaded by Thanthi TV on 20/06/2022
Phone Conversation with M.K.Kanimozhi, MP at 20/06/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.