செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2024

HomeFact Checkஅக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றாரா பாஜக நிர்மல் குமார்?

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றாரா பாஜக நிர்மல் குமார்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

அக்னிபத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இதனை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், “மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் தேச விரோதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். பிரதமர் மோடியின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் உறங்கிக் கொண்டு இருப்பது அசிங்கமாக உள்ளது” என்று பாஜக நிர்மல்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 01

Facebook Link

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 02

Facebook Link

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 03

Facebook Link

Also Read: ஓபிஎஸ் அதிமுகவை பாமக போல் சாதிக்கட்சியாக மாற்றி விடுவார் என்றாரா அண்ணாமலை?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் இத்தகவலானது கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டுகளை வெளியிட்டதா என்பதை அறிய, கதிர் நியூஸின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் நியூஸ்கார்டை கதிர் நியூஸ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து கதிர் நியூஸ் தரப்பைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். இதற்கு,‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று பதிலளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தேடியதில் சிடிஆர் நிர்மல்குமாரும் வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

Also Read: கணவன் இறந்தப்பின் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றாரா பாஜக நாராயணன் திருப்பதி?

Conclusion

அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று தமிழக பாஜகவின் தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியதாக பரவும்  நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet from CTR Nirmalkumar, BJP IT Wing President, tweeted on June 20, 2022
Newschecker Conversations


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular