Thursday, April 24, 2025
தமிழ்

Fact Check

Fact Check: அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினாரா?

banner_image

அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

கன்னியாகுமரி மண்டைக்காடு கோயிலில் நடக்கும் இந்து சமய மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்திருந்ததை தொடர்ந்து, இத்தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று அண்ணாமலை அறிக்கை விடுத்திருந்தார்.  

ஹைந்தவ சேவா சங்கத்துக்கு சொந்தமான இடத்தில், கடந்த 1936-ம் ஆண்டு முதல் மாசி கொடைவிழாவின்போது, அரங்கம் அமைத்து இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகினறது என்றும், இவ்வருடம் நடக்கவிருந்த மாநாட்டை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது என்றும் அண்ணாமலை இந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “அண்ணாமலை முதிச்சியற்ற சிலரால் தவறாக நடத்தப்படுகின்றார். அவர், மண்டைக்காடு கோயில் பகுதியில் ஹைந்தவ சங்கத்திற்கு சொந்தமாக நிலம் இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருப்பது பொய்யான தகவல். தமிழக அரசு மண்டைக்காடு கோயில் திருவிழா மற்றும் சமய மாநாட்டை நடத்துகிறது. அதற்கு மாறாக திருவிழாவையும், சமய மாநாட்டையும் அரசு தடை செய்திருப்பதாக தவறான அறிக்கை வெளியிட்டிருப்பது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்” என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

அண்ணாமலை தவறாக வழிநடப்படுகின்றார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Twitter@PrathapViru
அண்ணாமலை தவறாக வழிநடப்படுகின்றார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/vijhai.d
அண்ணாமலை தவறாக வழிநடப்படுகின்றார் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/selvakumar.ratnasamy

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Factcheck / Verification

அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் மண்டக்காடு கோயில் விவகாரம் குறித்து பொன். ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நடத்திய பத்திரிக்கையாளரை சந்திப்பு வீடியோ ஒன்றை கண்டறிந்தோம்.

அந்த வீடியோவில், இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது என்றும், சமய மாநாடு இந்த வருடமும் நடக்கும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் பேசி இருந்தார். அதேபோல் இப்பிரச்சனையை முடிக்க ஒரு நாள் முழுவதும் நேரத்தை செலவிட்ட அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு நன்றி என்றும் அவர் கூறி இருந்தார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அண்ணாமலை குறித்தோ, அவர் வெளியிட்ட அறிக்கை குறித்து பொன். ராதாகிருஷ்ணன் பேசி இருக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், கதிர் நியூஸ்இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதா என அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து கதிர் நியூஸை சேர்ந்த பிரதீப் அவர்களை தொடர்புக் கொண்டு   விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்ட்போலியானது, அதை நாங்கள் வெளியிடவில்லை என்று தெளிவுப்படுத்தினார்.

இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடகத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இத்தகவல் தவறானது என்று அவர் பதிலளித்தார்.

Also Read: மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

அண்ணாமலை பொய்யான தகவல் வெளியிட்டார் என்று பாஜக மூத்தத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation with Pradeep, Kathir News, dated February 22, 2023
Phone Conversation with CTR Nirmal Kumar, State President, BJP IT Wing, dated February 22, 2023
Youtube Video from Dinamalar dated February 21, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,898

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.