Claim: தீட்சதர்களுக்கு ஆதரவாக நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் நடத்தப்படும் – அர்ஜூன் சம்பத்
Fact: அர்ஜூன் சம்பத் இத்கவல் பொய்யானது என தெளிவுப்படுத்தியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபையில் பொதுமக்கள் ஏறி கடவுளை தரிசிக்க கூடாது என்று தடை விதித்த விவகாரமானது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தீட்சீதர்களுக்கு ஆதரவாக சாகும்வரை “நிர்வாண ஜலக்கிரீடை” போராட்டம் இந்து மக்கள் கட்சி சார்பாக நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நுழைய அனுமதிக்கப்படவில்லையா?
Fact Check/Verification
தீட்சதர்களுக்கு ஆதரவாக நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டை காணும்போதே இது கேலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்து தெளிவுப்படுத்த விரும்பினோம்.
முன்னதாக இந்து மக்கள் கட்சி சார்பில் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதா என அறிய அக்கட்சியின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் தீட்சதர்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி சில பதிவுகளை டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது. ஆனால் நிர்வாண ஜலக்கீரீடை செய்யப் போவதாக எந்த ஒரு தகவலும் அதில் காணப்படவில்லை.
ஆகவே இதனையடுத்து அர்ஜூன் சம்பத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று பதிலளித்தார்.
இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து கதிர் நியூஸின் ஆசிரியர் பிரதீப்பை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என அவர் தெளிவு செய்தார்.
Conclusion
தீட்சதர்களுக்கு ஆதரவாக நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with Arjun Sampath, Founder, Hindu Makkal Katchi, Dated June 29, 2023
Phone Conversation with Pradeep, Editor, Kathir News, Dated June 29, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)