மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“மீண்டும் அரசியலுக்கு வராலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியப் பிறகு அறிவிப்பேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக தினமலரின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் வதந்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, வைரலாகும் நியூஸ்கார்டை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் ஒரு வருடத்திற்கு முந்திய பழைய நியூஸ்கார்ட் என்பதை அறிய முடிந்தது.
ரஜினிகாந்த் அரசியலிருந்து விலகுவதாக அறிவித்தப்பின் கடந்த வருடம் ஜூலை 12 ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாக அறிவித்தார். இதுக்குறித்து அச்சமயத்தில் தினமலர் வெளியிட்ட நியூஸ்கார்டே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ரஜினிகாந்தின் இந்த சந்திப்பு குறித்து அப்போது ஊடகங்களில் வந்த செய்தியை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தப்பின் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், அவை மறுபடியும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களாகவே செயல்படும் என்று அறிவித்தார்.
Also Read: மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதா?
Conclusion
மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ்கார்ட் ஒரு வருடத்திற்கு முந்தையது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False
Sources
Artice Pubished by News 18 Tamil, Published on 10/07/2021
Artice Pubished by Puthiya Thalaimurai, Published on 10/07/2021
Dinamalar’s tweet, tweeted on 12/07/2021
Rajinikanth’s tweet, tweeted on 12/07/2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)