Sunday, April 6, 2025
தமிழ்

Fact Check

கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் ஈ.பி.எஸ்-ஐ நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்றாரா ஜெயக்குமார்?

banner_image

Claim: கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்றார் ஜெயக்குமார்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கொடநாடு வழக்கில் ஆதாரம் இருந்தால் திமுக கொடுக்கட்டும். ஆதாரம் உண்மையாக இருந்தால் எடப்பாடியை நாங்களே கோர்ட்டில் ஒப்படைக்கின்றோம். தண்டனை கொடுத்தால் அவர் சிறை செல்ல தயங்க மாட்டார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

  கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter @chowdryam
  கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook / thangarajsuriyavel
  கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook / radhakrishnan.krishnan.92775838

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தை அண்ணாமலைக்கு கூடியதாக பரப்பும் இணையவாசிகள்!

Fact Check/Verification

கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்ந்தோம்.

இதில் வைராலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பப்பது என்பதை அறிய முடிந்தது. ‘திமுகவின் ஊழல் சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டும் பணியை தொடங்கிவிட்டது மத்திய பாஜக அரசு. 2ஜி-யால் அன்று ஆட்சி கவிழ்ந்தது. இப்போது ஜி ஸ்கொயரால் திமுக வீட்டுக்குப் போகும் நிலைமை உருவாகும்!’ என்று ஜெயக்குமார் பேசியதாக ஜூனியர் விகடன் கடந்த திங்களன்று (24/04/2023)  நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து ஜூனியர் விகடனின் ஆசிரியர்களுள் ஒருவரான பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

Also Read: கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி என்று பரவும் போலி பிபிசி கருத்துக்கணிப்பு!

Conclusion

கொடநாடு வழக்கில் ஆதாரம் தந்தால் எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Facebook post, from Junior Vikatan, Dated April 24, 2023
Phone Coversation with Britto, Vikatan, Dated April 27, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,694

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.