சென்னை மாநகராட்சி, குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் இன்று அனைத்து வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை தற்போது வழங்குகிறது என்கிற செய்தி ஒன்று வாட்ஸ்அப் மூலமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1636 பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் மரபணு மாறிய `Double mutant variant’ என்னும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவுருத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 16 முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்ட வயதினருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இணை நோய்கள் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் அனைத்து வயதினருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படுப்படுவதாகக் கூறி, மருத்துவமனை விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ்அப் செயலியில் வைரலாகி வருகிறது.

வைரலாகப் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
சென்னை மாநகராட்சி தற்போது எல்லா வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாகப் பரவும் வாட்ஸ்அப் செய்தி குறித்து ஆராய்ந்தபோது, சென்னை மாநகராட்சியின் “Greater Chennai corporation” என்னும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது.
Archived Link: https://archive.ph/4UjMn#selection-3019.0-3019.256
குறிப்பிட்ட அந்த பதிவில், “கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். இப்போது, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் & 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக உங்களுக்கான அழைப்பு வரும் வரை காத்திருக்கவும்.” என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, குறிப்பிட்ட அந்த வாட்ஸ்அப் பதிவு போலியானது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

Conclusion:
சென்னை மாநகராட்சி தற்போது எல்லா வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாகப் பரவும் வாட்ஸ்அப் செய்தி போலியானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources:
Greater Chennai Corporation: https://twitter.com/chennaicorp/status/1374311990936539139/photo/1
Twitter: https://twitter.com/COVIDNewsByMIB/status/1375051762801909762/photo/1
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)