Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக மாலைமுரசு செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தி சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.
“மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு.” என்கிற தலைப்புடன் இந்த புகைப்படச்செய்தி வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘கற்பிப்பு’ எனும் வார்த்தையை ‘கற்பழிப்பு’ என்று பிழையாக பேசினாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக மாலைமுரசு வெளியிட்ட செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப்பக்கத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று ”மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களின் மகனும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசினார்.” என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், உத்தவ் தாக்கரே குறித்த வரிகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. மேலும், ஆதித்ய தாக்கரேயுடன் மகாராஷ்டிர நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய் இருப்பதையும் நம்மால் காண முடிந்தது.
கூடவே, குறிப்பிட்ட புகைப்படத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதித்ய தாக்கரேயுடன் இருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய் என்பதுவும் திமுகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார் என்பதும், அவருடன் இருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய்; மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், ஆதித்ய தேசாயின் தந்தையுமான உத்தவ் தாக்கரே இல்லை என்பது இதன் மூலமாக உறுதியாகிறது.
Also Read: 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக டி.ஆர் பாலு குறித்து தவறான செய்தி பரப்பும் அண்ணாமலை!
மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக மாலைமுரசு வெளியிட்ட செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter Post From, CMO Tamil Nadu, Dated February 10, 2023
Twitter Post From, Arivalayam, Dated February 10, 2023
Gallery From, Social News XYZ
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)