Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற தலைப்பில் பிரதமர் மோடி படத்துடன் புத்தகம் ஒன்றினை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றையும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
Also Read: பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றாரா நிதியமைச்சர்?
சமீபத்தில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைத்துறை, மின் உற்பத்தி, ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்களை தனியாருக்கு குத்தகைக்கு அளித்து நிதி திரட்டும் செயல்பாடு ஒன்றினை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். இதுகுறித்து, நாடு முழுவது பல்வேறு சர்ச்சைகளும், அதிர்வலைகளும் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகிக்கும் அண்ணாமலை, “30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி?” என்கிற தலைப்புடன் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெற்ற புத்தகம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற தலைப்பிலான புத்தகத்தை பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். ஆனால், குறிப்பிட்ட தேடலில் நம்மால் கண்டறிய முடியவில்லை.
தொடர்ந்து, வைரல் புகைப்படத்தில் உள்ள மைக்கில் ஒரே நாடு என்கிற வார்த்தை இருந்ததைத் தொடர்ந்து அதன் மூலம் சமீபத்தில் அண்ணாமலை பேசிய வீடியோ எதுவும் வெளியாகியுள்ளதா என்று தேடியபோது, செப்டம்பர் 18 ஆம் தேதியன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் குறித்த நிகழ்வு ஒன்றில் பேசிய அண்ணாமலை, பாஜகவின் கொள்கைகளை முன்மொழியும் ஒரே நாடு இதழ் குறித்தும் பேசியுள்ளார்.
குறிப்பிட்ட வீடியோவில், 12:25 இல் இருந்து ஒரே நாடு சிறப்பு இதழ் குறித்து அண்ணாமலை பேசியுள்ளார். வீடியோவில் அவர் கையில் குறிப்பிட்ட அந்த நாளிதழை வைத்திருக்கும் காட்சியே, புகைப்படமாக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டு 30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.
இதனை பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தரப்பிலும் தொடர்பு கொண்டு நாம் தெரிந்து கொண்டோம்.
30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற தலைப்பிலான புத்தகத்தை பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 17, 2025