Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல லட்சம் விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்துப் போராடி வருகின்றனர். இப்போராட்டத்துக்கு கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இதற்கு இந்தியத் தரப்பில்,
”இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டு தலைவர்கள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பாக இதுபோன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றவை. அரசியல் நோக்கங்களுக்காக ராஜதந்திர உரையாடல்கள் தவறாக சித்தரிக்கப்படாமலிருப்பதும் சிறந்தது”
என்று பதில் தரப்பட்டது.
இந்நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகளுடன் அமர்ந்து, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டதாக சமூக வலைத்தலங்களில் பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் இப்படமானது 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்கிற உண்மை நமக்குத் தெரிய வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளித் தினத்தில் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இந்துக் கோயில்கள் மற்றும் சீக்கியர்களின் குருத்வாராவுக்கு வருகைப் புரிந்தார்.
அப்போது குருத்வாராவில் எடுக்கப்பட்டப் புகைப்படத்தை வைத்தே தற்போது விவசாயிகள் போராட்டத்தில் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துக் கொண்டார் என்று பரப்பப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்தச் செய்தி அப்போது ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்திருந்தது. அச்செய்தியில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படமும் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிகிறது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அதில் கலந்துக் கொண்டதாகக் கூறி பரவியப் புகைப்படமானது தவறானது என்பதையும், அது 2015 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் எடுக்கப்பட்டது என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/BarkhaS37691560/status/1333988710895865856
Twitter Profile: https://twitter.com/RajeshR71176567/status/1334324596279951360
Hindustan Times: https://www.hindustantimes.com/punjab/canadian-pm-justin-trudeau-visits-temple-gurdwara-on-diwali/story-NaybSNITxt33rWUkrYcPyO.html
Twitter Profile: https://twitter.com/bhavishaydhaka/status/1334405274195484673
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)