செவ்வாய்க்கிழமை, மே 14, 2024
செவ்வாய்க்கிழமை, மே 14, 2024

HomeFact Checkகோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய ஷர்மிளாவின் இந்தி பதிவு என்று பரவும்...

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய ஷர்மிளாவின் இந்தி பதிவு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய இளம்பெண்ணின் இந்தி பதிவு

Fact: கோவாவில் பிரச்சினைக்கு உள்ளான பெண் ஷர்மிளாவும் , சமூக வலைத்தளத்தில் இந்தியில் பதிவிட்ட ஷர்மிளாவும் வேறு வேறு நபர்கள்.

கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்கிற பெண்ணிடம் இந்தி தெரியாது என்று கூறியும் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்றாக வேண்டும் என்று CISF வீரர் ஒருவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஷர்மிளா சமூக வலைத்தளத்தில் இட்ட இந்தி பதிவு என்று, பாஜகவின் செல்வகுமார் உட்பட பலரும் “முதல்வரை #தத்தி_ஸ்டாலின் என்று நாம் சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம், 1) அடி முட்டாள் கூட்டத்தை ஐடி விங்காக வைத்திருப்பது 2) அந்த கூமுட்டைகள் நன்றாக இந்தி தெரிந்த ஒரு பெண்ணை இந்தி தெரியாதவர் என உருவாக்கிய நாடகத்தை நம்பி பதிவிட்டுள்ளார் முதல்வர் .” என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.

விமான நிலையத்தில்
Screenshot from X @Selvakumar_IN

Archived Link

Screenshot from X @Shibin_twitz

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஜனவரி 1ஆம் தேதி முதல் வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check/Verification

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய இளம்பெண்ணின் இந்தி பதிவு என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் பிரச்சினைக்கு உள்ளாகிய ஷர்மிளா ராஜசேகர் என்கிற அப்பெண்ணின் பேட்டி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ஷர்மிளா ராஜசேகர் என்று இயங்கும் மற்றொரு பெண்ணின் இந்தி பதிவுகளை எடுத்து அவர்தான் கோவாவில் இந்தி தெரியாது என்று கூறிய ஷர்மிளா என்று பாஜகவினர் உள்ளிட்டோர் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் இயங்கும் ஷர்மிளா ராஜசேகர் என்னும் பெண் தனது X மற்றும் Facebook பக்கங்களில், “எதோ கோவா ஏர்போர்ட் ப்ராப்ளம் நடந்திருக்கும் போல. அங்க பேசிய பெண் யார் னே எனக்கு தெரியாது. ஒரே பேர் இருக்குன்னு என்னைய (கிடைக்கறவங்கள) வச்சி பப்ளிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்களே பாஜக அதி்முக அறிவுஜீவிகளா .. உங்களுக்கெல்லாம் யோசிக்க இருக்க வேண்டிய ஒண்ணு இருக்கா இல்லையா”  என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “இன்று கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என பிரச்சனை செய்திருக்கிறீர்கள். ஆனால் இங்கு இந்தியில் ராகுலுக்கு ஏதோ ஒரு செய்தி 14-05-2023 அன்றே அனுப்பியுள்ளீர்கள். ஏன் இந்த ஏமாற்றுவேலை சகோதரி” என்று ஒருவர் எழுப்பிய கேள்விக்கு X பக்கத்தில் “ அது நான் இல்லை சகோதரரே… எனக்கு ஹிந்தி நல்லாவே தெரியும்” என்று பதிலளித்துள்ளார் பாஜக மற்றும் இதர கட்சியினரால் வைரல் செய்யப்படும் ஷர்மிளா ராஜசேகர்.

தொடர்ந்து, DT Next செய்தியாளர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்படும் இந்தி பதிவர் ஷர்மிளா ராஜசேகரும், கோவா விமான நிலையப் பெண்மணி ஷர்மிளாவும் வேறுவேறு நபர்கள் என்றும், கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய ஷர்மிளா X பக்கத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Also Read: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?

Conclusion

கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று கூறிய இளம்பெண்ணின் இந்தி பதிவு என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from Sharmila Rajasekar, Dated December 14, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular