வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact Checkராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக பரவும் எகிப்து வீடியோ!

ராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக பரவும் எகிப்து வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக பரவும் வீடியோ.

Fact: இச்சம்பவம் 2014 ஆம் ஆண்டில் எகிப்தில் நடந்ததாகும். மாணவர்களை தாக்கிய அந்த நபர் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

“ராஜ்பாக் டிபிஎஸ் பள்ளி ஆசிரியர் ஷகீல் அகமது அன்சாரி வல்சாத்தின் இதயமற்ற செயல்”  என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இவ்வீடியோவில் ஒரு ஆண் சிறுவர், சிறுமியர்களை கொடூரமாக தாக்குவதை காண முடிந்தது.

ராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக பரவும் வீடியோ.

X Link | Archive Link

ராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக பரவும் வீடியோ.

Archive Link

ராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக பரவும் வீடியோ.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: “பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று பரவும் உடைந்த அரசு பேருந்து படம்!

Fact Check/Verification

ராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அத்தகவல் குறித்து ஆராய்ந்தோம்.

இத்தேடலில் ‘Egypt orphanage video: Manager jailed for beating children’ என்று தலைப்பிட்டு பிபிசியில் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தியானது செப்டம்பர் 10, 2014 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

ராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக பரவும் வீடியோ.

எகிப்தின் கிசா பகுதியில் இயங்கி வந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் இச்சம்பவம் நடந்ததாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இல்லத்தின் மேலாளர் ஒசாமா முகமது ஓத்மான் என்பவர் அவரிடம் அனுமதி வாங்காமல் தொலைக்காட்சி பார்த்ததால் அந்த சிறார்களை கடுமையாக தாக்கியுள்ளார். அவரின் மனைவியே இதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இவ்வீடியோ வெளிவந்ததை தொடர்ந்து அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.

தொடர்ந்து தேடுகையில் இச்சம்பவம் குறித்து மேலும் சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்திகளிலும் இச்சம்பவம் எகிப்தில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

 Also Read: சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?

Conclusion

ராஜ்பாக் DPS பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தாக்கியதாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். உண்மையில் இச்சம்பவம் எகிப்து நாட்டின் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் நடந்ததாகும்.

இச்சம்பவமானது ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2014 ஆம் ஆண்டில் நடந்துள்ளது. இக்குற்ற செயலை செய்த ஒசாமா முகமது ஓத்மான் என்பவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் கிடைத்துள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from BBC, Dated Septmber 10, 2014
Report from Ahram, Dated August 04, 2014
Report from Egyptianstreets, Dated August 03, 2014
Report from Captaintarekdreams

இச்செய்தியானது ஏற்கனவே செப்டம்பர் 20, 2021-இல் நியூஸ்செக்கர் குஜராத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.  


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular