Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க உத்திரப்பிரதேசத்தில் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்று ABP நாடு தரப்பு உறுதி செய்துள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் நிலையில், இன்றைய தினத்தில் உத்திரப்பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அசைவம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடையை மீறி உத்திரப்பிரதேசத்தில் அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுர்யா கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க உத்திரப்பிரதேசத்தில் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
முன்னதாக கேஷவ் பிரசாத் மவுர்யா இவ்வாறு ஒரு தகவலை தெரிவித்தாரா என்று அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்களிலும், பொது ஊடகங்களிலும் தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு தகவலை அவர் தெரிவித்ததாக எந்த ஒரு பதிவோ செய்தியோ நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது ABP நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் “இது ராமர் கோயில் மட்டுமல்ல, தேசிய ஒருமைப்பாட்டைக் குறிக்கும் தேசியக் கோயிலாகும்” என்று கேஷவ் பிரசாத் மவுர்யா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்றை ABP நாடு வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனைத் தொடர்ந்து ABP நாடின் ஆசிரியர் சண்முக சுந்தரத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: ராமர் கோவில் கும்பாபிஷேகம்; இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடையா?
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க உத்திரப்பிரதேசத்தில் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுர்யா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Tweet from ABP Nadu, Dated Jan 18, 2024
Phone Conversation with Shanmuga Sundaram, Editor, ABP Nadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 27, 2024
Ramkumar Kaliamurthy
February 8, 2024
Vijayalakshmi Balasubramaniyan
January 29, 2024