2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான செயல்பாடு கொண்ட நாணயம் இந்திய ரூபாய்தான் என்பதாக வைரல் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இந்திய ரூபாய் 2022ஆம் ஆண்டின் மோசமான செயல்திறன் கொண்ட ஆசிய நாணயமாக முடிவடைகிறது.” என்பதாக அந்த செய்தி பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரான்ஸில் சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அகற்றப்பட்டனரா? உண்மை என்ன?
Fact Check/Verification
2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான செயல்பாடு கொண்ட நாணயம் இந்திய ரூபாய் என்பதாக செய்தி வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தோம்.
கூகுளில் “மோசமான ஆசிய ரூபாய்”, “மோசமான செயல்பாடு”, “ஆசிய நாணயம்” போன்று சில முக்கிய வார்த்தைகளைக் கொண்டு ஆங்கிலத்தில் தேடியபோது நமக்கு இதுதொடர்பாக பல்வேறு செய்தி கட்டுரைகள் கிடைத்தன. இந்த செய்திகள் அனைத்திலும் பொதுவாக ராய்ட்டர் இதழின் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தரவைக் கொண்டு ஆராய்ந்தபோது, கடந்த டிசம்பர் 30, 2022 அன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்த ட்விட் ஒன்று இதுதொடர்பாக நமக்குக் கிடைத்தது.
எனினும், அவர்களுடைய முழுமையான செய்திக்கட்டுரையை ஆராய்ந்தபோது அதில், “2022 இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு 10% ஆக முடிவடைந்துள்ளது. இது 2013க்குப் பிறகு மிகவும் மோசமான முடிவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “10.14% வீழ்ச்சியுடன் 2022ஆம் ஆண்டின் மிக மோசமாக நாணயமாக இந்திய கரன்சி முடிவடைந்துள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கட்டுரை தொடர்ந்து, “இதுபோன்றே 2022ஆம் ஆண்டின் முடிவில் இந்திய கரன்சியை விட மோசமான சரிவைச் சந்தித்துள்ள மற்றொரு நாணயம் ஜப்பானின் யென் ஆகும். கிட்டதட்ட டாலரின் மதிப்பிற்கு 12% சரிவைச் சந்தித்துள்ளது யென்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட செய்தி கட்டுரையின் இறுதியில், “இந்த செய்திக் கட்டுரை சரியான தரவுகளுடன் எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு குறித்த தெளிவான தரவுகள் முதல் பத்தியில் அளிக்கப்பட்டுள்ளது.” என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், முதலில் வெளியான கட்டுரையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 2022ஆம் ஆண்டின் மிக மோசமான நாணயம், இந்திய ரூபாய் என்பது மாற்றப்பட்டு, 2022ஆம் ஆண்டில் மிக மோசமாக செயல்பட்ட ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று என்பதாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராய்ட்டரின் இரண்டு கட்டுரை பதிவுகளையும் நாம் இங்கே பகிர்ந்துள்ளோம். அதில், டிசம்பர் 30,2022 11.35க்கு பகிரப்பட்டுள்ள கட்டுரையின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதை நீங்கள் தெளிவாக கண்டறிய முடியும்.


தலைப்பு மாற்றப்படுவதற்கு முன்பான கட்டுரையில், “2022ஆம் ஆண்டில் மிக மோசமாக செயல்பட்ட நாணயம், இந்திய கரன்சி” என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவான உண்மை சரிபார்ப்பு கட்டுரையை நமது நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளோம்.
Also Read: எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?
Conclusion
2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான செயல்பாடு கொண்ட நாணயமாக இடம்பிடித்த இந்திய ரூபாய் என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Reuters report, December 30, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)