Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த ‘டயமாட்டோல்’ என்னும் பொருள் பெட்ரோலில் கலந்து விற்பனை செய்யப்படுவதால் பெட்ரோல் பாதி விலைக்கு விற்பனையாகிறது; இது மக்களுக்குத் தெரியாத காரணத்தினால் பிரதமர் பழி சுமக்கிறார் என்பதாக சமூக வலைத்தள செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான எரிபொருளாகப் பயன்படும் பெட்ரோல் விலையேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இறக்குமதியாகும் பெட்ரோலில் ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் சேர்க்கப்படுவதாகவும், அது இந்திய விஞ்ஞானிகள் தயாரித்தது எனவும், அதன்காரணமாக பெட்ரோலை பாதிக்கு பாதி விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது எனவும் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அதை சார்ந்து தங்கள் கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்தச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்திக் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பெட்ரோலில் ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் கலக்கப்படுவதாகவும், அது இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் கூறப்படும் கூற்று குறித்து அறிய குறிப்பிட்ட அந்த வாக்கியத்தை இணையத்தில் சர்ச் செய்தோம்.
ஆனால், குறிப்பிட்ட அந்த குறிச்சொல் மூலம் தேடும்போது டீமேட் கணக்கு துவங்குவது எப்படி? டீமேட் வணிக லாபம் உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பான பக்கங்களே நமக்குக் காணக் கிடைக்கிறது.
மேலும், குறிப்பிட்ட அந்த தமிழ்வார்த்தையை ஆங்கிலப்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, இணையத்தில் அது தொடர்பான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் இது தொடர்பான எவ்வித வெளியீடுகளும் நமக்குக் கிடைக்கவில்லை.
அதைதொடர்ந்து, இது தொடர்பாக மற்ற ஊடகங்களில் ஏதேனும் செய்தி வந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்தபோது அது போன்ற எவ்வித செய்தியும் வெளியிடப்படவில்லை.
தொடர்ந்து, குறிப்பிட்ட பெயரில் நிஜமாகவே ஏதேனும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய அரசுத்துறை சார்ந்த விஞ்ஞானிகள் சிலரிடம் கேட்டபோது, அது முற்றிலும் சித்தரிக்கப்பட்ட பெயர் என்பது நமக்குத் தெரிய வந்தது.
எனவே, ‘டயமாட்டோல்’ என்கிற இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பொருள் கலக்கப்படுவதால்தான் பெட்ரோலை பிரதமர் மோடி ஆட்சியில் பாதி விலைக்கு விற்க முடிகிறது என்று பரவுகின்ற தகவல் முற்றிலும் தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Ministry of Petroleum and Natural gas: https://petroleum.nic.in/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
August 6, 2021
Ramkumar Kaliamurthy
June 1, 2021
Ramkumar Kaliamurthy
July 2, 2021