இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகவும், அது அமெரிக்கா மற்றும் கிறிஸ்துவம், இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்தது என்பதாகவும் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மதச்சார்ப்பற்ற நாடாக, வேற்றுமையில் ஒற்றுமை பேணும் நாடாக இருந்தாலும் கூட சமீபத்திய காலகட்டத்தில் மதம் ரீதியான முன்னெடுப்புகளும், சமூக வலைத்தள சண்டைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன.
இதற்கிடையில், “இந்தோனேஷியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது அமெரிக்க கண்டம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் அதாவது கிறிஸ்துவம், இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர்” என்று புகைப்படப் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நாம் தமிழர் கட்சி தம்பிகள் பொங்கல் பரிசை வாங்க மாட்டார்கள் என்று சீமான் கூறினாரா?
Fact check/ Verification
இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவாலயம் ஒன்று கண்டறியப்பட்டதாகப் பரவுகின்ற தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் பதிவில் இணைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் புகைப்படத்தை க்ராப் செய்து அதனை ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உள்ளாக்கினோம்.
அதன்முடிவில், குறிப்பிட்ட சிவாலயம் அமைந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதி 1985 ஆம் ஆண்டு வியட்நாமில் உள்ள Cat Tien என்கிற இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரியவந்தது. மேலும், குறிப்பிட்ட சிவாலயம் நான்கு முதல் 9 ஆம் நூற்றாண்டு வயதுள்ள ஒன்றாகும்.

இந்தியாவில் இருந்து வியட்நாமில் குடியேறிய இந்தியக் குடிமக்களால் அவர்களுடைய வழிபாடுகளுக்கு என்று இதுபோன்ற பல்வேறு கோயில்கள் அங்கு நிறுவப்பட்டுள்ளன. தற்செயலாக 1985 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த இடங்கள், தொல்பொருள் ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று வியட்நாமில் கடந்த 2020ம் ஆண்டும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த Sandstone சிவலிங்கமும் கண்டறியப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
எனவே, இந்தோனேஷியாவில் கிடைத்த 7500 ஆண்டுகள் பழைமையான சிவாலாயம் என்பதாக பரவும் புகைப்படம், உண்மையில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒன்று என்பது உறுதியாகிறது.
Conclusion:
இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவாலயம் ஒன்று கண்டறியப்பட்டதாகப் பரவுகின்ற தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)