Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மாஸ்க் அணிந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஈரோட்டில் மக்களுடன் அமர்ந்து உணவருந்தியபோது மாஸ்க்கினை கழட்டாமல், உணவும் உண்ணாமல் புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்தார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
தொடர்ந்து, நேற்று ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, நெசவாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தி மாஸ்க் அணிந்து கொண்டே சாப்பிடுவது போல பொய்யாக புகைப்படம் எடுத்துக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இப்புகைப்படச் செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ராகுல் காந்தி மாஸ்க் அணிந்துகொண்டு, சாப்பிடுவது போல புகைப்படத்திற்கு போஸ் மட்டும் கொடுத்ததாகப் பரவும் செய்தியின் உண்மைத்தன்மை அறிய, காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ராகுல் காந்தியின் ஈரோடு பிரச்சார புகைப்படங்களைக் கண்டறிந்தோம்.
அதில், மாஸ்க் அணிந்திருக்கும் புகைப்படத்துடன், அமர்ந்து உணவு உண்பது போன்ற புகைப்படமும் நமக்குக் காணக் கிடைத்தது.
கூடவே, அவர் தன்னுடன் அமர்ந்து உணவு உண்ட பெண்களுடனும், எதிரில் நிற்பவர்கள் சிலருடனும் பேசுவதும் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஒரு சிறிய வீடியோவும் பகிரப்பட்டிருந்தது.
ஆனால், அதில் அவர் உணவு உண்ணும் காட்சிகள் இல்லை என்பதால் தமிழக முன்னணி ஊடகங்களின் வீடியோக்களை ஆராய்ந்து பார்த்தோம்.
அதில், புதியதலைமுறை மற்றும் வசந்த் தொலைக்காட்சியின் ராகுல் காந்தி மாஸ்க் இன்றி, பொதுமக்களுடன் உணவு உண்ணும் காட்சி தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
எனவே, இதன்மூலம் ராகுல் காந்தி உண்மையாக மக்களுடன் உணவு சாப்பிட்டார்; கொரோனா விழிப்புணர்வுக்காக, சமூக இடைவெளிக்காக அவர் மாஸ்க் அணிந்துள்ளார் என்பதும் நமக்குத் தெளிவாக தெரிய வந்தது.
மாஸ்க் அணிந்து கொண்டு உணவு சாப்பிடுவது போல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஈரோட்டில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் என்று பரவும் செய்தி தவறானதாகும் என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Vasanth Tv: https://fb.watch/3esD-cdBcf/
Puthiyathalaimurai: https://youtu.be/qFA0RA_FfZ0
Congress Twitter: https://twitter.com/INCIndia/status/1353301718273024000
INCT: https://twitter.com/INCTamilNadu
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)