Claim: பாதிக்கப்பட்டவருக்கு பதில் போலியான நபருக்கு பாதபூஜை செய்த பாஜக
Fact: வைரலாகும் செய்தி தவறானதாகும்.
மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிப்படைந்தவருக்கு பதிலாக போலியான நபருக்கு பாதபூஜை செய்யப்பட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் உதவியாளர் பர்வேஷ் சுக்லா, உண்மையாகவே பாதிக்கப்பட்ட நபரும், முதலமைச்சரால் கால்களை கழுவ அழைத்துவரப்பட்ட நபரும் வேறுவேறு நபர்கள் என்பது ‘The Quint’ செய்தியாளர் நடத்திய விசாரணையின் மூலம் அம்பலம்!” என்று கலைஞர் செய்திகள் உட்பட பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



கலைஞர் செய்திகளின் நியூஸ்கார்டினை நமக்கு வாட்ஸப் மூலமாக அனுப்பி விளக்கமளிக்க கேட்டிருந்தார் நம்முடைய வாசகர் ஒருவர். சமூக வலைத்தளங்களிலும் இச்செய்தி பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிப்படைந்தவருக்கு பதிலாக போலியான நபருக்கு பாதபூஜை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி பற்றிய உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக, The quint இந்த சம்பவம் குறித்து என்ன செய்தி வெளியிட்டுள்ளது என்று தேடியபோது, அதன் செய்தியாளர் விஷ்ணுகாந்தின் ட்விட்டர் பதிவுகள் நமக்குக் கிடைத்தன.
அதில், விஷ்ணுகாந்த், தஸ்மத் தன்னிடம் கூறிய விளக்கங்களையும் பதிவிட்டுள்ளார். அதன்படி, முதலில் தன்னிடம் மது போதையில் இருந்ததால் தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்றும் அந்த வீடியோவில் உள்ள நபர் தான் இல்லை என்றும் அவர் கூறிய நிலையில், அவர் மீது சிறுநீர் கழித்த பர்வேஷ் தன்னுடைய குற்றத்தை காவல்நிலையத்தில் ஒத்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தஸ்மத்தின் மனைவி பேசியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ள விஷ்ணு, வீடியோவில் இருக்கும் நபர் தன்னுடைய கணவர்தான் என்று அவர் விளக்கமளித்துள்ளதையும் வெளியிட்டுள்ளார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், சிறுநீர் கழித்த சம்பவத்தில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர் நான் இல்லை என்று தஸ்மத் கூறும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இதனை மறுக்கும் வகையிலேயே The quint குறிப்பிட்ட செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், விஷ்ணுவின் விளக்கத்தை மேற்கோள் காட்டி அவர் கூறிய விளக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது கலைஞர் செய்திகள். சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிப்படைந்த நபர் தஸ்மத் என்பவர்தான் என்று சித்தி காவல்துறை மற்றும் சித்தி ஆட்சியர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நம்முடைய செய்தியாளர் அதனை தொலைபேசியில் பேசி உறுதி செய்துள்ளார்.
Also Read: இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!
Conclusion
மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிப்படைந்தவருக்கு பதிலாக போலியான நபருக்கு பாதபூஜை செய்யப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Post from, Vishnukant, Dated July 09, 2023
Twitter Post From, SP of Siddhi, Dated July 09, 2023
Twitter Post From, Collector of Siddhi, Dated July 09, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)