செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024

HomeFact Checkநீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் காட்சியளித்தது ஒலிம்பிக் போட்டியின்போது நடந்ததா?

நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் காட்சியளித்தது ஒலிம்பிக் போட்டியின்போது நடந்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்தனர்.

Fact: இத்தகவல் தவறானதாகும். இந்நிகழ்வானது சென்ற வருடம் ஹங்கேரியில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்ததாகும்.

2024 ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றது. அதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் முதல் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில் பதக்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் ஒன்றாக சேர்ந்து இந்தியக் கொடியுடன் புகைப்படத்தைற்கு காட்சியளித்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்தனர்.

X Link | Archive Link

ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்தனர்.

Facebook Link

ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்தனர்.

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்ததாக கூறி வீடியோ ஒன்று வைர லானதை தொடர்ந்து வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இத்தேடலில் புதாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் பதக்கம் வென்றதாக அல்ஜஸீரா வெளியிட்டிருந்த செய்தியில் நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் காட்சியளிக்கும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியானது 28 ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.

ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்தனர்.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் DNA India Newsன் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் படம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

2023 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது ஈட்டி எறிதல் போட்டி முடிந்து பரிசளிக்கும் நிகழ்வில் புகைப்படம் எடுக்கும்போது அர்ஷத் பாகிஸ்தான் கொடியை மறந்து வந்ததாகவும், அதை கவனித்த நீரஜ் இந்தியக் கொடியுடன் நிற்க அவரை அழைத்ததாகவும், அதற்கு அர்ஷத் இசைந்து இந்தியக் கொடியுடன் நின்று புகைப்படத்திற்கு காட்சியளித்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 Also Read: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தால் செய்யப்பட்ட மீனாட்சி சிலை என்ற தகவல் உண்மையா?

Conclusion

ஒலிம்பிக் போட்டியின்போது நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படத்துக்கு காட்சியளித்ததாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்நிகழ்வானது சென்ற வருடம் ஹங்கேரியின் புடாபெஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்ததாகும்.

இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from Aljazeera, Dated August 28, 2023
Report from DNA India News, Dated August 28, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular