Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நீரவ் மோடி, 13000 கோடியில் தன்னிடம் 32% மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும், மீதியை பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரித்துக் கொண்டதாகவும் லண்டன் நீதிமன்றத்தில் கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்டு இந்தியாவில் இருந்து 2018 ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பி ஓடியவர் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி. அவர் தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் அவரை இந்தியாவிற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தான் லண்டனுக்கு தப்பிச் செல்லவில்லை; நாடு கடத்தப்பட்டேன். மேலும், 13,000 கோடியில் 32% மட்டுமே தனக்கு கிடைத்தது. மீதியை பாஜகவின பிரித்துக் கொண்டனர் என்பதாக அவர், லண்டன் நீதிமன்றத்தில் கூறியதாகப் புகைப்படம் ஒன்று வைரலாகியது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
நீரவ் மோடி, 13000 கோடியில் தனக்கு 32% மட்டுமே கிடைத்ததாகவும் மற்றவை எல்லாம் பாஜக தலைவர்களால் பிரித்துக் கொள்ளப்பட்டதாகவும், தான் இந்தியாவில் இருந்து தப்பி ஓடவில்லை; நாடு கடத்தப்பட்டேன் என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த அறிய அது குறித்த ஆய்வு நடத்தினோம்.
குறிப்பிட்ட அந்த ட்விட்டர் பதிவினை நாம் தேடியபோது அது நீக்கப்பட்டிருந்தது. எனினும், கூகுளின் தேடுதல் பொறியில் அதன் இணைப்பை மட்டும் காண முடிந்தது.
தொடர்ந்து, நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் இதுபோன்ற வார்த்தைகளை தெரிவித்திருக்கிறாரா என்று தேடியபோது அதுபோன்ற எவ்வித தரவுகளும் நமக்குக் கிடைக்கவில்லை.
மேலும், நீரவ் மோடியின் விசாரணையானது மார்ச் 2019ல் நடைபெற்றிருந்த நிலையில் முதல் முறை ஆஜர் படுத்தப்பட்டபோது மட்டுமே அவரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும், இதுபோன்ற தகவல் ஒன்று கடந்த 2019ம் ஆண்டு முதலே வைரலாகி வந்துள்ளது.
அவரது விசாரணையின்போது, நான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்திருப்பதை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ மார்ச் 21, 2019 அன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. இதைத்தவிர, வைரலாகும் பதிவில் இடம்பெற்றிருப்பது போன்ற எந்த வாக்கியங்களையும் அவர் கூறவில்லை. நீரவ் மோடியின் வழக்கு குறித்த இணைப்புகளை கீழே நாங்கள் அளித்துள்ளோம்.
பிப்ரவரி மாதம், வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ரேட் நீதிமன்றம் நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்து அறிவித்திருந்த நிலையில்,
நீரவ் மோடி இந்தியாவிற்கு தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக தடை கேட்டு லண்டன் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரவ் மோடி, 13000 கோடியில் தனக்கு 32% மட்டுமே கிடைத்ததாகவும் மற்றவை எல்லாம் பாஜக தலைவர்களால் பிரித்துக் கொள்ளப்பட்டதாகவும், தான் இந்தியாவில் இருந்து தப்பி ஓடவில்லை; நாடு கடத்தப்பட்டேன் என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியதாகப் பரவுகின்ற செய்தி ஆதாரப்பூர்வமற்றது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Live Law: https://www.livelaw.in/columns/nirav-deepak-modi-punjab-national-bank-uk-high-court-174625
Economic Times: https://retail.economictimes.indiatimes.com/news/apparel-fashion/jewellery/pnb-scam-court-issues-show-cause-notice-to-nirav-modi/82603192
India Today: https://www.youtube.com/watch?v=Judu5U29AVI
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 4, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2025